சொந்த மகனுக்கே உதவி பண்ண யோசிக்கும் விஜயா.. விட்டுக் கொடுக்காத அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

Siragadikka aasai today episode november 20 : இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ரோகிணி பைனான்ஸ்சியர் மனைவி என்னோட ரொம்ப நாள் கஷ்டமர் அதனால அவங்க வீட்டுக்கு மசாஜ் தெரபி பண்ண போயிருந்த அங்க தான் மீனா பைனான்ஸ்யர்கிட்ட வந்து முத்துக்கு கார திரும்ப கொடுக்க சொல்லி கெஞ்சிட்டு இருந்தாங்க..

பைனான்சியரோட பொண்ண கூட்டிகிட்டு அவர் டூர் போயிருக்காருன்னு சொன்னதெல்லாம் பொய் என்று ரோகினி வீட்டில் சொல்கிறார் உடனே விஜயா அப்ப இவ்வளவு நாள் நீ வேலை இல்லாமல் தான் இருந்து இருக்கியா இப்பல்லாம் பொய் சொல்ல கூட ஆரம்பிச்சுட்டியா எல்லாம் உன் பொண்டாட்டி கத்து கொடுத்த டிரெய்னிங்கா என்று விஜயா சொல்கிறார்.

லியோ படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு கிடைத்த லாபம்.. இத்தனை கோடியா.?

பிறகு மனோஜ் நானும் ரோகிணியும் வேலைக்கு போய் தான் வீட்டு செலவுக்கு பணம் தந்துட்டு இருக்கோம் எங்க காசுல தான் நீங்க சாப்பிடுறீங்க இவ்வளவு நாள் வேலைக்கு போற மாதிரி நடிச்சிட்டு இருந்து இருக்க என்று கேட்கிறார் பிறகு உனக்கு வேலை கிடைக்கலன்னா பார்ல போய் வேலைக்கு செய்துக்கோ..

அதுதான் உனக்கு ஏத்த வேலை என்று மனோஜ் கிண்டல் பண்ணுகிறார் பிறகு மீனா போதும் நிறுத்துங்க அவரை யாரும் எதுவும் சொல்லற வேலை வச்சுக்காதீங்க அவர் ஒன்னும் வேலை இல்லன்னு மத்தவங்கள மாதிரி சும்மா ஒன்னும் ஒக்காந்து இருக்கல.. மாமா மனசு கஷ்டப்படுவாரு என்றதால தான் பைனான்சியர் கார் எடுத்துட்டு போயிட்டாருன்னு பொய் சொன்னாரு..

மகா மேல் பழியை போட பார்த்து கடைசியில் அவமானப்பட்ட ஐஸ்வர்யா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

ஆனா இப்ப அவர் என்ன வேலைக்கு போயிட்டு இருக்காரு தெரியுமா ஒரு அப்பார்ட்மெண்ட்ல இருக்குற எல்லா காரயும் தொடச்சுட்டு இருக்காரு அதை நான் போய் பார்த்தேன் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று மீனா சொல்கிறார் பிறகு முத்து மீனா கிட்ட உன்னை யாரு பைனான்சியர் வீட்டிற்கு போக சொன்னா அவன் என்ன வார்த்தை சொன்னான்னு தெரியுமா..

நீ பாட்டுக்கு இப்ப பணத்தை வாங்கிட்டு போய்ட திடீர்னு உங்க அப்பா செத்துட்டா அந்த பணம் எனக்கு எப்படி திரும்பி கிடைக்கும் என்று சொன்னான் அதனால தான் அவன அடிச்சேன் என்று சொல்ல மீனா இப்படி சொல்லி இருந்தா எனக்கே தான் அடிக்கணும்னு கோவம் வருது நீங்க அவன்கிட்ட இனிமே மன்னிப்பு கேட்க வேணாம் என்று மீனா சொல்கிறார்.. இதை அண்ணாமலையும் வெளியில் இருந்து காதில் வாங்கிக் கொள்கிறார்..

பிறகு அண்ணாமலை செல்வத்தை கூட்டிக்கிட்டு முத்து உடைய சொந்தக்காரை வாங்கியவரிடம் என் பையன் ஒரு அவசரத்துக்கு தான் உங்ககிட்ட காரை வித்துட்டான் இப்ப அவன் வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான் அதனால அந்த கார் எனக்கு திரும்ப வேண்டும் என்று கேட்க நான் நாலு லட்சத்துக்கு அந்த கார வாங்குனேன்.

ஐந்து லட்சம் கொடுத்தீங்கன்னா திரும்பி கொடுத்தர்றேன் என அவர் சொல்ல கடைசியாக நாலரை லட்சத்தில் பேசி முடித்து விட்டனர் பிறகு வீட்டிற்கு வந்த அண்ணாமலை விஜயாவிடம் எனக்காக தான் முத்து அவனோட கார வித்தான் இப்ப அவன் வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான் அதனால அவனுக்கு அந்த காரை திருப்பிக் கொடுக்கணும்..

நம்ம வீட்டு பத்திரத்தை வைத்து கொடுத்திடலாம் என்று கேட்க முதலில் விஜயா எனக்குன்னு இருக்கறதே அந்த வீடு ஒன்னு தான் என்று சொல்லிவிட்டு பிறகு சரி அப்படின்னா என்னோட நகையும் சேர்த்து வாங்கி கொடுங்க அதனால 6 லட்சத்துக்கு வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்கிறதுனா எடுத்துட்டு போங்க என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.