பைனான்சியர் வீட்டில் ரோகினி இருந்ததை பார்த்து அதிர்ச்சியான மீனா.. இறங்கி வருவாரா முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode November 18 : இன்றைய எபிசோடில் ரவி அவங்க அம்மா வந்து பார்த்து பேசியதை ஸ்ருதியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் பிறகு அம்மா நம்மளை வீட்டுக்கு கூப்பிட்டாங்க என்று சொல்வதும் பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் உங்க அம்மா உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்காங்க..

போயிட்டு வா என ஸ்ருதி சொல்வதும் நா மட்டும் தனியா போறதா நம்ப ரெண்டு பேருமே அவங்க கூட இருக்கணும்னு நினைக்கிறாங்க நான் வந்தா ஸ்ருதியோட தான் வருவேன்னு நான் சொல்லிட்டேன் என்று சொல்வதும் பரவாயில்லையே என்னை கழட்டிவிட்டு போயிடுவேன்னு நினைச்சேன் இந்த அளவுக்கு பேசி இருக்க என்று ஸ்ருதி சொல்கிறார்.

ரூ.100 கோடி டார்கெட் வைத்து அடிக்கும் நயன்தாரா.! விக்கிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல..

அடுத்து மீனா சமைத்து வைத்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு என்னோட சாப்பாடுல பொறியல்ல காய்கறி தான் இருக்கு பல்லி எதும் இல்ல நல்லா பாத்துக்கோங்க.. இங்கதான் இதுவா இருந்தாலும் ஆதாரம் கேட்பீங்களே.. நேத்து நான் சமைச்சுட்டு மூடி வச்சுட்டு தான் போன அதுக்கப்புறம் வேற யாரோ தான் திறந்து இருக்காங்க..

ஆனா நான் சொல்றத மாமா மட்டும் தான் நம்புனாரு வேற யாருமே என்ன நம்பல அதனாலதான் இன்னைக்கு எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டேன். நான் நல்லா தான் சமைச்சு வச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு நான் கோவிலுக்கு போறேன் என கிளம்புகிறார்.. அடுத்து பைனான்சியரோட மனைவிக்கு மசாஜ் பண்ணுவதற்காக பைனான்சியர் ரோகினிக்கு போன் பண்ணி வர சொல்கிறார்.

கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..! ஆத்தாடி இளநடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல.

ரோகினியும் நான் உங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் என்று சொல்கிறார்.. பிறகு மீனாவும் பைனான்சியரை பார்த்து பேச தான் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கிறார் அப்பொழுது போற வழியில் உள்ள கோவில்களில் இறங்கி பைனான்சியர் எப்படியாவது என் புருஷனுக்கு கார் கொடுத்திடனும் என்று வேண்டிக் கிட்டு போய்..

பைனான்சியரை பார்த்து என் புருஷனா மன்னிச்சிருங்க என்று பேசும்போது ரோகிணியும் அங்கு அவருடைய மனைவிக்கு மசாஜ் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆகிறார் இருந்தாலும் என் புருஷன் எனக்கு இப்ப சரியான வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு. நீங்க தான் அவருக்கு திரும்ப கார் கொடுக்கணும் அவருக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என மீனா கேட்பதற்கு..

உன்ன பார்த்தாலும் பாவமா தான் இருக்கு நான் உன் புருஷனை மன்னிச்சிடுறேன் ஆனா அவன் ஆபீஸ்க்கு வந்து எல்லோரும் இருக்கும்போது என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அப்பதான் நான் திரும்ப காரை கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார்.. பிறகு மீனா முத்து போய் மன்னிப்பு கேட்பாரான்னு தெரியலையே என குழம்பி நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..