குடித்துவிட்டு மாமியார் வீட்டில் அலப்பறை பண்ணும் முத்து.. பொறுத்து போகும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 10 : இன்றைய எபிசோடில் தல தீபாவளிக்கு மீனாவும், முத்துவும் வந்து கொண்டிருக்கும் போது அவரது காரை பைனான்சியர் ஆளை வைத்து வட்டி கட்டவில்லை என தூக்கி விட்டார்.. பிறகு முத்துவும் மீனாவும் இந்திரா வீட்டுக்கு ஆட்டோவில் வந்திருக்கின்றனர் அங்கு ஹவுஸ் ஓனர் என்னப்பா ஆட்டோவில் வந்து இருக்கு கார் எங்க என்று கேட்க மீனா கார் மெக்கானிக் செட்ல இருக்கு என்று பொய் சொல்கிறார்.

அவங்க கிட்ட பொய் சொல்ற என்னோட காரா பைனான்ஸ் ஏன் தூக்கிட்டு போய்ட்டாங்க.. அதுக்கெல்லாம் உங்க பொண்ணு தான் காரணம் இவள் மட்டும் ஏற்கனவே பத்திரம் அப்பாயிட்ட கொடுத்தது என்கிட்ட சொல்லாததால தான் இவ்வளவு பிரச்சனை என்று சொல்கிறார்.. பிறகு நான் போய் பைனான்சியர் கிட்ட திரும்ப பேசுறேன் என்று முத்து கிளம்புகிறார்.

அந்த முரடன் உன்ன நல்லா வச்சிருக்கானா.. கோமதியிடம் வம்பு இழுத்த சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அங்கு போனதும் காருக்கு ஒரு வாரம் தான பணம் கட்ட லேட் ஆச்சு, அதுக்குள்ள ஏன் கார் எடுத்துட்டு வந்தீங்க கார் குடுங்க என்று கேட்க உனக்கு எல்லாம் காரு தர முடியாது வட்டி படத்தை கட்டிட்டு என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு கார வாங்கிட்டு போ என்று சொல்ல உன் கால்லலாம் என்னால விட முடியாது நீ இல்லன்னா என்ன எனக்கு கார் தர எவ்வளவோ பேர் இருக்காங்க என்று முத்து கிளம்பி விட்டார்.

ரோகினுடைய அம்மா ரோகினிக்கு போன் பண்ணி தீபாவளி வாழ்த்து சொல்கிறார் அப்போது ரோகினி நான் தான் உன்னை போன் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல, எங்க வீட்ல மாட்டிக்கிட்டா என்ன ஆகிறது என்று கேட்க தீபாவளிக்கு வாழ்த்து சொல்லலாம்னு தான் போன் பண்ண நம்ம குடும்பத்தோட கோவிலுக்கு போகலாம்னு..

கமலிடம் சாரி சார் அவ்வளவுதான்.. இதுதான நம்ம வழக்கமே.! ஆணவத்தின் உச்சத்தில் மாயா, பூர்ணிமா

எனக்கும் ஆசையா இருக்கு மாப்பிள்ளை கூட்டிட்டு ஊருக்கு வரியா என்று கேட்க.. அதுக்கான நேரம் வரும் அப்ப கூட்டிட்டு வரேன் என்று ரோகினி சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.. அடுத்து நைட்டு முத்து இந்திரா வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து அந்த ஹவுஸ் ஓனர் கிட்ட மீனா ஏன் கார் மெக்கானிக் செட்ல இருக்குன்னு பொய் சொன்னா..

நான் அவர்கிட்ட உண்மைய சொல்லனும் என்று போய் அவர் வீட்டு கதவை தட்ட உடனே மீனா ஸ்வீட் கொடுக்க தான் வந்தோம் என சமாளித்து விடுகிறார்.. பிறகு மீனாவுடைய அம்மா மாப்பிள சாப்பிடுங்க என்று சொல்ல என்னோட வாடகை காரும் போச்சு சொந்தக்காரும் போச்சு  இது எல்லாம் யாரால மீனாவால தானே அத்தை என சொல்லிக் கொண்டிருக்கிறார் இதுடைய எபிசோட் முடிந்துள்ளது..