அந்த முரடன் உன்ன நல்லா வச்சிருக்கானா.. கோமதியிடம் வம்பு இழுத்த சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode november 10 : இன்றைய எபிசோடில் பாண்டியன் கோமதியிடம் உங்க அண்ணனுங்க எப்படி என்ன அனாதைன்னு சொல்லலாம், எனக்குன்னு நீ இருக்க என் பசங்க இருக்காங்க என்னை அனாதன்னு உன் அண்ணன் சொன்னதும் கதிருக்கு எவ்வளவு கோபம் வந்தது கதிர் ரொம்ப நல்லவன் என் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான்.

ஆனா கொஞ்சம் கோவக்காரன் அதான் என்று சொல்ல உடனே கோமதி இப்ப தனியா வந்து அவனை பத்தி இவ்வளவு பெருமையா பேசுறது எல்லோரும் முன்னாடியும் அவனை அப்படி அடிச்சிட்டீங்க என்று சொல்ல என் பையன நான் அடிப்பேன் அதுக்காக பாசம் இல்லாம ஆயிடுமா என பேசுகிறார். அடுத்து மீனா செந்திலுக்கு போன் பண்ணி காதுகுத்து ஃபங்ஷன் நல்லபடியா முடிஞ்சுச்சா என்று கேட்க..

0 சைஸ் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்ட்லியா.! தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்.

இல்லை மாமா வீட்டுக்கும் எங்களுக்கும் பெரிய பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்கிறார் பிறகு செந்தில் அவரது மாமன், அண்ணனிடம் அவருடைய காதல் கதையை சொல்கிறார்.. அடுத்து காலையில் கோமதி வாசல் தெளித்து கூட்டிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் வீட்டில் வடிவும் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்..

அப்பொழுது கோமதி என் புருஷன எப்படி அப்படி பேசலாம் நீங்க எல்லாம் அண்ணனுங்க கூட தான இருக்கீங்க அவருக்கு எடுத்து சொல்ல கூடாதா என அண்ணிகளுடன் ஜடாமடயாக பேசுகிறார்.. பிறகு என் அண்ணனுங்க பண்றது ரொம்ப தப்பு அவரை இனிமே பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முத்துவேலும், சக்திவேலும் வெளியே வந்துவிட்டனர்.

அர்ச்சனாவுக்கு ஏபிசிடி கூட தெரியாது? விசித்ராவிடம் வாதாடும் பூர்ணிமா..

உடனே கோமதி நான் கல்யாணம் பண்ணிட்டு போய் இருபது வருஷத்துக்கு மேல ஆகுது இன்னமும் அவரை ஏன் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க என்று கேட்க நீ பண்ண துரோகத்தை எங்களால் இன்னமும் மறக்க முடியல இப்ப கூட அவன விட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்தா இப்பகூட உனக்கு நாங்க கஞ்சி ஊத்துவோம் ஆனா அவன் கூட இருந்தினா நீ நல்லா இருக்க மாட்ட என்று சொல்கிறார்..

பிறகு கோமதி என் புருஷன் என்ன தங்க தட்டுல தாங்குறாரு நல்லா தான் வச்சிருக்கார் என்று சொல்ல சக்திவேல் அந்த முரட்டு பையன் உன்ன நல்லா வச்சிருக்கானா என்று கேட்கிறார் பிறகு கோமதி அவர் உங்க கிட்ட மட்டும் தான் முரட்டுத்தனமாக நடந்துப் பாரு நீங்க நடந்துக்குறத பொறுத்து தான் அதுவும், மத்தபடி நல்லவர்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது..