ரோகினியை தேடி வந்த வசீகரன்.. காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai Today Episode November 07 : இன்றைய எபிசோடில் முத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மீனாவிடம் உன்னால தான் எங்க அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு என் கார் போனது எல்லாமே உன்னால தான் என திட்டிக் கொண்டிருக்கிறார்.. அதற்கு மீனா நான் தான் நடந்ததை சொன்னேனே, என் மேல எந்த தப்பும் இல்லை என்று சொல்ல முத்து அதை ஏற்றுக் கொள்ளவில்லை பிறகு இந்திரா மீனாவுக்கு போன் பண்ணி அண்ணாமலை அண்ணா எப்படி இருக்காரு..

உன் புருஷன் உன் கிட்ட நல்லா பேசுறாரா என்று கேட்க.. இங்க ஒரு பிரச்சனையும் இல்லம்மா எல்லாம் சரியாயிடுச்சு என மீனா  சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டு உள்ளே போகும்போது விஜயா மீனாவை பார்த்து இங்க எது நடந்தாலும் உங்க அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருப்பியா.. நீ நெனச்ச மாதிரியே எல்லாத்தையும் நடத்திட்ட இல்ல ரவியை எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்ட, அடுத்து மனோஜ் ரோகிணி இந்த வீட்ட விட்டு பிரிக்க தான் பிளான் போடுற என்று கேட்க மீனா நான் ஏன் அதெல்லாம் பண்ண போறேன் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

கேமியோ ரோலில் நடித்துள்ள விஜய், அஜித், ரஜினி.! கிளைமாக்ஸ் காட்சியில் சம்பவம் பண்ணிய தனுஷ், சூர்யா

அடுத்த நாள் காலையில் மனோஜ் வேலைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.. பிறகு கொரியர் காரர் வேஷத்தில் அந்த வசிகரன் ரோகிணியை தேடி வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அவரைப் பார்த்த மீனா ரோகிணி இடம் வந்து உங்களுக்கு கொரியர் வந்திருக்கு என்று சொல்ல உடனே விஜயா உங்க அப்பா தான் தீபாவளிக்கு ஏதாவது போனஸ் அனுப்பி இருப்பார் போய் பாருமா என்று வருவதும் அந்தப் வசிகரனை பார்த்து ரோகிணி ஷாக் ஆகிறார் பிறகு ஏடிஎம் கார்டு தான் வந்து இருக்கு நீங்க போங்க அத்தை என்று சொல்லிவிட்டு வசிகரனிடம் ரோகினி இங்க எதுக்கு வந்த என்று கேட்க அவர் நான் தான் உன்கிட்ட பணம் கேட்டு இருந்தேன்.

நீ அனுப்பி வைக்கிற மாதிரி தெரியல அதனாலதான் வீடு தேடி வந்தேன் என்று சொல்ல ரோகிணி நாளைக்குள்ள எப்படியாவது பணம் தரேன் என்று சொல்கிறார் பிறகு அவர் நாளைக்கு சாயந்திரம் ஏழு மணிக்குள்ள பணம் வரலனா ஏழு பத்துக்கு உங்க வீட்டுக்கு வந்து உன்ன பத்தின உண்மை எல்லாத்தையும் சொல்லிடுவேன் என மிரட்டி விட்டு போகிறார். இதை மீனா பார்த்துக் கொண்டிருந்ததால் மீனாவுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்குமோ என ரோகினி நினைக்கிறார் ஆனால் மீனா இது எதையும் காதில் வாங்கவில்லை.. பிறகு மனோஜ் போனை வீட்டில் வைத்து விட்டேன் என திரும்பி போனை எடுக்க வீட்டிற்கு வருகிறார்.

பிரதீப்பை தொடர்ந்து ரெட் கார்டு கொடுக்க மற்றொரு ஆண் போட்டியாளரை தேர்ந்தெடுத்த சூனியக்காரி மாயா, ஐஷு.! என்னடா நடக்குது இங்க..

அப்பொழுது ரோகிணி மனோஜிடம் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது உன் ஆபீஸ்ல உனக்கு தீபாவளி போனஸ் தருவாங்களா என்று கேட்க மனோஜ் நான் வேலைக்கு போய் கொஞ்ச நாள் தான் ஆகுது தருவாங்களான்னு தெரியல கேட்டு பாக்குறேன் என்று பொய் சொல்கிறார்.. இதைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா மனோஜிடம் நான் எப்படியாவது அரேஞ்ச் பண்றேன்னு சொல்கிறார்.. அடுத்து விஜயா பார்வதி வீட்டிற்கு போய் எனக்கு ஒரு 50 ஆயிரம் பணம் வேண்டும் கடனா குடு அப்புறம் கொடுத்துடுறேன் என்று கேட்கிறார்.

அதற்கு பார்வதி நான் இப்ப எங்க பணத்துக்கு போவேன், என்று சொல்லிவிட்டு ரவி கல்யாணம் பண்ணி இருக்கிற இடம் ரொம்ப பெரிய இடம்.. அந்தப் பொண்ணு மட்டும் உன் வீட்டில் இருந்திருந்தா உன் புருஷனுக்கு ஒரு சென்ட் இல்ல நாலு அஞ்சு ஸ்டண்ட் கூட வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு அவங்க கிட்ட பணம் இருக்கு, ரவி தான் கல்யாணம் பண்ணிட்டான்ல நீயே போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா, அந்த பொண்ணு உன் வீட்ல இருந்தா உனக்கு பணக்கஷ்டமே வராது ரோகிணியை விட பெரிய இடம் என்று பார்வதி சொல்கிறார் இதனால் விஜயாவும் யோசிக்கிறார் இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது..