ஸ்ருதியின் பணதிமிருக்கு முடிவுகட்டிய முத்து.! இனிதான் இருக்கு மீனாவின் ஆட்டமே – சிறகடிக்க ஆசை எபிசொட்

Siragadikka Aasai today episode January 4 : இன்றைய எபிசோடில் மீனாவுக்கு சர்ப்ரைஸ் ஆக ஒரு பூக்கடையை முத்து வைத்து கொடுத்துள்ளார் அதற்கு விஜயா மலர் அங்காடி என்றும் பெயரை வைத்துள்ளார் பிறகு இந்த கடையை யார் ஓபன் பண்ண போறது என்று முத்து எல்லோரிடமும் கேட்கிறார்.

அப்பொழுது அப்பா இல்லனா அம்மா தான் ஓபன் பண்ண போறாங்க என்று சொல்ல அப்பா அம்மா தலைமையில இந்த வீட்டோட கடைசி மருமகள் ஸ்ருதி இந்த கடையை திறந்து வைக்கட்டும் என்று சொல்ல அப்பா இருக்கும்போது எதுக்கு ஸ்ருதி திறந்து வைக்க வேண்டும் என்று ரவி கேட்கிறார். அதற்கு முத்து பொதுவா ஜவுளி கடை நகைக்கடை எல்லாத்தையும் சினிமா காரங்க வந்து திறந்து வைப்பாங்க இல்ல..

thalapathy 68 : GOAT -ல் விஜய் லுக் பாத்திங்க நம்ம ப்ளே பாய் பிரஷாந்த் லுக்கை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

அந்த மாதிரி சினிமா, சீரியலுக்கு டப் பண்ற ஸ்ருதி இந்த கடையை திறந்து வைக்கட்டும் என்று சொல்கிறார்.. பிறகு ஸ்ருதியும் வந்து கடையை திறந்து வைக்கிறார் அடுத்து முத்துவும் மீனாவும் அண்ணாமலை விஜயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். பிறகு இந்திரா காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். பிறகு மீனா போய் முதலாளி சீட்டில் உட்காருகிறார்.

முத்து அப்பாவிடம் 100 ரூபாய் காசு கொடுத்து நீ தான் அப்பா ராசியான கை நீயே முதல் முதல்ல மீனா கிட்ட பூ வாங்குப்பா என்று சொல்ல அண்ணாமலையும் மீனாவிடம் பூ வாங்கி விஜயா கையில் கொடுக்கிறார்.. பிறகு முத்து 2500 ரூபாய் பணம் உள்ள ஒரு கவரை ரவியை கூப்பிட்டு இத உன்னோட பொண்டாட்டியை வாங்கிக்க சொல்லு இந்த கடையை திறந்து வச்சாங்க இல்ல, அதுக்காக தரேன் என்று 2500 பணத்தை கொடுக்கிறார்..

ரசிகர்களின் “கனவு ராணி” தொடைழகி ரம்பா சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்

ஸ்ருதி அந்த கவரை வாங்கிக் கொண்டு கோபமாக வீட்டில் உள்ளே போய்விட்டார்.. அடுத்து விஜயா என் பேர்ல ஏன் வாசல்ல கடை போட்டு இருக்கான் எனக்கு அசிங்கமா இருக்கு பாக்குறவங்க அசிங்கமா பேசுவாங்க என்று சொல்ல அண்ணாமலை இதுல என்ன, ரோகினியும் உன் பேர்ல தான பார்லர் வச்சு இருக்கா, அதனால முத்துவும் உன் பேர்ல பூ கடை வச்சிருக்கான் இது பெருமைப்படுற விஷயம் தான் என்று சொல்கிறார். பிறகு பார்வதி விஜயாவுக்கு போன் பண்ணி வாழ்த்துக்கள் உன் பேர்ல பூ கடை முத்து ஆரம்பிச்சிருக்கான்..

ஏற்கனவே ஒரு பார்லர் ஓட ஓனர் இப்ப பூக்கடையும் உன்னோட பேர்ல இருக்கு, விஜயா என்ற பேரு இனிமே ரொம்ப பாப்புலர் ஆயிடும் போல சீக்கிரமே விஜயா குரூப் ஆஃப் கம்பெனி நிறைய உருவாகும் போல என்று விஜயாவை நக்கல் பண்ணுகிறார். இதைக் கேட்டு விஜயா நீ வேற ஏன் எரியிற தீயில் அண்டா கணக்கா எண்ணெய ஊத்துற என்று பார்வதியை திட்டி விட்டு போனை வைக்கிறார்.

பிறகு சொந்தக்காரங்க நிறைய பேர் விஜயாவுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்கின்றனர். இதையெல்லாம் பார்த்து விஜயா கடுப்பாகிறார். அடுத்து ரவி சுருதி இடம் முத்து எல்லோருக்கும் டிபன் அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கான் சாப்பிடலாம் வா இங்க என்ன பண்ற என்று கேட்க..

நான் நேற்று மீனாக்கு 2000 பணம் கொடுத்தேன்ல அதுக்காக இப்ப கூட ரூ.500 சேர்த்து 2500 ரூபாய் பணம் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தி இருக்காரு, இந்த மாதிரி மீனாவுக்கு கடை வைத்து கொடுத்ததே அவருடைய ஈகோ தான் காரணம், இவ்வளவு நாள் அவரை யாரும் கேள்வி கேட்காம இருந்துட்டாங்க நான் எதுத்து கேள்வி கேட்கிறது.

எங்க மீனாவை அவர்கிட்ட இருந்து பிரிச்சிடுவேன்னு பயத்துல தான் இப்படி பண்றாரு என்று சொல்ல ரவி நீஏன் எதா இருந்தாலும்  நெகடிவா யோசிக்கிற அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என ரவி சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.