மீனாவுக்கு சொந்தமாக தொழில் ஆரம்பித்து கொடுத்த முத்து.. ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

Siragadikka Aasai today episode January 3 : இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அவங்க துணி துவைக்க சொல்லி 2000 பணம் கொடுத்தாங்க என்று முத்துவிடம் சொல்வதற்கு நீ தான் அந்த பொண்ண ரவிக்கு கல்யாணம் பண்ணி வச்ச இப்ப உன்னை எப்படி நடத்துறா அவதான் பணம் கொடுத்தா..

நீ எதுக்கு வாங்குன என்று கேட்க நான் என்ன பண்ண முடியும் அவங்க எல்லாரும் வேலைக்கு போறவங்க பணக்கார குடும்பத்து பொண்ணுங்க திரும்பி அவங்கள பேசி சங்கடப்படுத்த வேண்டாம், இந்த பணத்தை ரவி கிட்ட கொடுத்துடுங்க என்று மீனா முத்துவிடம் கொடுத்துவிட்டு தூங்க போய்விட்டனர்.. அடுத்த நாள் காலையில் 5:00 மணிக்கு முத்து மீனாவுடைய அம்மா வீட்டுக்கு வந்து கதவை தட்டுகிறார்.

கைவிட்ட விஜய் டிவி.. கை கொடுத்து தூக்கிய பிரபல தொலைக்காட்சி.. பாண்டியன் ஸ்டோர் சுஜாதா நடிக்கும் புதிய சீரியல்…

இந்திராவும், சீதாவும் இந்த நேரத்தில் யார் வந்து கதவ தட்டுவது ஒருவேளை கந்து வட்டிக்காரன் ஜெயிலில் இருந்து திரும்ப வந்திருப்பானோ என்று பயத்தில் அவனை அடிப்பதற்காக கட்டை எடுத்துக் கொண்டு ரெடியாக நிற்கின்றனர். பிறகு கதவை திறந்ததும் முத்துவாக இருப்பதும் மாப்ள நீங்களா என்ன இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க என்று கேட்க நம்ம எல்லோரும் ஒரு இடத்துக்கு போகனும் சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பி வாங்க என்று சொல்கிறார்..

அதேபோல் இந்திரா, சீதா, சத்தியா மூன்று பேரும் கிளம்பி முத்துவுடன் வருகின்றனர்.. வீட்டிற்கு வந்த முத்து மீனாவையும் சீக்கிரம் குளிச்சிட்டு வெளியே போற மாதிரி புது புடவை கட்டிட்டு ரெடியாகு என்று சொல்கிறார் மீனா எங்கேயாவது வெளியே போறோமா எதுக்கு என கேட்பதற்கு நான் எதுக்குன்னு எல்லாம் அப்புறம் சொல்றேன் நான் சொன்ன மாதிரி ரெடியாகு என்று சொல்கிறார்.

முத்து படத்தில் எஜமானை காதலிக்கும் சுபஸ்ரீயா இது.. தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

பிறகு முத்து அவங்க அப்பா அம்மா மனோஜ் ரவி ரோகிணி எல்லோரையும் கதவைத் தட்டி எழுப்பி சீக்கிரம் எல்லோரும் ரெடியாகுங்க ஒரு இடத்துக்கு போகணும் என்று கேட்கிறார். எல்லோரும் முத்து என்ன இப்படி காலங்காத்தால டார்ச்சர் பண்றாரு என்று திட்டிவிட்டு பிறகு ரெடியாகின்றனர். எல்லோரும் ரெடியாகி கீழே வரும் போது மீனா கீழே அவங்க அம்மா சீதா சத்தியா இன்னும் பூ கற்ற நண்பர்கள் எல்லோரும் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

பிறகு விஜயா இவங்கள பார்க்க தான் கால காத்தால நம்மள கிளம்பி கீழ வர சொன்னானா வாங்க போகலாம் என்று விஜயா சொல்கிறார் உடனே அண்ணாமலை இருங்க என்று இந்திராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு எல்லோரையும் வெளியே கூட்டிட்டு போகிறார் அப்பொழுது வீட்டு வாசலில் கடை இருப்பதை பார்த்து மனோஜ் என்ன நம்ம வீட்டுக்கு முன்னாடி யார் கடை போட்டு இருக்காங்க போலீசுக்கு போன் பண்றேன் என்று சொல்கிறார் .

பிறகு முத்து அந்த கடையை ஓபன் பண்ணுகிறார் அதில் விஜயா மலர் அங்காடி, உரிமையாளர் முத்து மீனா என்று பெயர் இருக்கிறது.. அதைப் பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பிறகு அண்ணாமலை மீனா சொந்தமா ஒரு தொழில் செய்யப் போறா என்று சந்தோஷப்படுகிறார்…சத்யா உனக்காக தான் மாமா இந்த கடையை ஆரம்பித்து இருக்கிறார் என்று சொல்கிறார்..

பிறகு முத்து நேத்து நைட்டி என்கிட்ட சொன்னல எனக்கு வீட்டு வேலையை தவிர என்ன தெரியும் என்று, நீ பூ சூப்பரா கட்டுவே அதனாலதான் உனக்கு இந்த கடை ஆரம்பிச்சிருக்கேன் இனிமே நீயும் சொந்தமா வேலை செய்யலாம் என்று சொல்கிறார். மீனா முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடுகிறது இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது