2000 பணம் கொடுத்து மீனாவை முழு வேலைக்காரியாக மாற்றிய ஸ்ருதி.. கோபத்தின் உச்சிக்கே சென்ற முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode January 2 : இன்றைய எபிசோடில் விஜயா மீனாவிடம் கொஞ்சம் துணி கொடுத்து இதை துவைத்துவிடு என்று சொல்கிறார். மீனாவும் சரி என்று வாங்கிக் கொண்டார் பிறகு ரோகிணியும் இதுல மனோஜியுடைய டிரஸ் கொஞ்சம் இருக்கு அவர் கார் ஷோரூம்ல பெரிய பெரிய ஆளுங்க கார் வாங்க வராங்க அதனால மனோஜ் பாக்க லூக்கா இருக்கணும்..

இந்த டிரஸ் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லியான டிரஸ் வாஷிங் மெஷின்ல போட்டா வீண் ஆயிடும். அதனால நீ கையால துவச்சு கொடு என்று கேட்க மீனா நான் அவருக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன், கார் வாங்க வரவங்க காரை பார்க்க தான வராங்க ஒங்க புருஷன் சட்டையை பார்க்கவா வராங்க அப்படியே துவைக்கணும்னா நீங்களே துவைச்சுக்கோங்க என்று மீனா சொல்லிவிட்டார்.

தமிழுக்காக வெட்டிய புதைக் குழியில் தானே விழுந்த அர்ஜுன்.. எத்தனை முறை தான் பல்பு வாங்குவ மாப்பிள்ளை..

அந்த நேரத்தில் ஸ்ருதியும் மீனாவிடம் வந்து இதுல கொஞ்சம் டாப் இருக்கு இதை துவைத்து கொடுத்துடுறீங்களா என்று கேட்க மீனா பரவால்ல குடுங்க ஸ்ருதி நான் துவைச்சு தரேன் என்று சொல்கிறார்.. உடனே ரோகினி நா மனோஜ் டிரஸ் கொடுத்தா மட்டும் வாங்க மாட்டேங்குற இப்ப ஸ்ருதி கொடுத்த உடனே வாங்கிக்கிறேன் என்று கேட்க, இந்த வீட்ல இருக்குற எல்லோருக்காகவும் நான் வேலை செய்வேன் மனோஜ்க்காக மட்டும் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று மீனா சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ருதி மீனா ஏற்கனவே வீட்ல எவ்வளவு வேலை செய்றீங்க இந்த நேரத்துல நானும் உங்களுக்கு வேலை கொடுத்து கஷ்டப்படுறேன், ஆன்ட்டி நீங்க வீட்ல தான் இருக்கீங்க நீங்க மீனாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க ரெண்டு பேரும் சேர்ந்து துவைச்சீங்கன்னா சீக்கிரம் துவைத்து விடலாம் என்று சொல்கிறார். உடனே விஜயா இவ என்ன நம்ம பக்கம் திரும்புறா என்று நினைக்கிறார்..

விசித்ரா படுக்கையறை ரூமுக்குள் புகுந்த நடிகர்.. அய்யய்யோ அவர் ரொம்ப நல்லவர் வக்காலத்து வாங்கும் 80’ஸ் நடிகை..

பிறகு ரோகினி நம்ம நாள் முழுக்க நின்னு கஷ்டப்படுறோம் வீட்டு வேலை எல்லாம் ஒரு விஷயமா சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு டைம் இருந்தா மீனா அதுக்கப்புறம் தூங்க தான் போறாங்க ஆனா நம்ப அப்படி இருக்க முடியுமா, என்று சொல்ல ஸ்ருதி நம்ம செய்றது ஒரே வேலை இருந்தாலும் நம்ம அதுக்கு சம்பளம் வாங்குறோம்..

ஆனா மீனா எத்தனை வேலை செய்றாங்க.. கஷ்டம் தான் அவங்க கஷ்டத்தை நான் புரிஞ்சுக்கிறேன் அதுக்காக ஒன்னு பண்ண போறேன் என்று ஸ்ருதி ரூமுக்கு போய் 2000 பணத்தை எடுத்துட்டு வந்து மீனா இத புடிங்க என்று சொல்கிறார். உடனே மீனா இந்த வீட்ல எல்லா வேலையும் எனக்கு சொல்லுவாங்க ஆனா நீங்க துணியை கொடுத்து துவைக்க சொல்லி அதுக்கு சம்பளமும் கொடுக்குறீங்க என்று கேட்க..

ஸ்ருதி நீங்க ஏன் இதை சம்பளமா பாக்குறீங்க அன்னைக்கு ரோகிணி கூடதான் அத்தைக்கு பாக்கெட் மணி கொடுத்ததா சொன்னாங்க அதுக்காக அத்தை வேலைக்காரி ஆயிடுவாங்களா என்று கேட்க உடனே ரோகினி நான் எப்ப அத்தை அப்படி நினைச்ச, அவங்க என்னோட அம்மா மாதிரி என்று சொல்ல நானும் அப்படி தான் சொல்றேன் மீனாவும் என்னோட சிஸ்டர் மாதிரி தான்..

அதனால தான் அவங்களோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு இந்த பணம் தரேன் உங்களுக்கு ஏதாவது தேவைன்னா வாங்கிக்கோங்க மீனா என்று சொல்லி பணத்தை கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். நான் தான் தப்பு பண்ணிட்டேன் துணியை வாஷ் பண்ண சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்து இருந்தா என் வேலையும் ஆயிருக்கும் போல என்று மீனாவை ரோகிணி நக்கல் பண்ணுகிறார்.

அடுத்து ரவிக்கு இந்த விஷயம் தெரிந்து ஸ்ருதியிடம் நீ பண்ணது ரொம்ப தப்பு அண்ணிக்கு சம்பளம் கொடுத்து இருக்க என்று கேட்க, ஸ்ருதி நீங்க எல்லோரும் ஏன் அதை சம்பளமா நினைக்கிறீங்க நான் என்னோட அக்காவா நினைச்சு தான் அவங்க கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு அவங்க செலவுக்கு பணம் தந்தேன் என்று ஸ்ருதி சொல்ல என்னதான் இருந்தாலும் நீ பண்ணது தப்பு தான் என்று ரெண்டு பேருக்கும் இடையே சண்டை வருகிறது..

அடுத்து மீனா முத்துவிடம் இந்த வீட்ல நான் ஒரு வேலைக்காரியா தான் இருக்கேன் அது எனக்கு இப்பதான் புரியுது என்று சொல்லி பிறகு ஸ்ருதி அவங்க துணியெல்லாம் வாஷ் பண்ண சொல்லி 2000 பணம் கொடுத்தாங்க என சொல்வதும் நெனச்ச அந்த பொண்ணு ஒரு பண திமிரு புடிச்சது நீ தான் அது நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருந்த இப்ப உனக்கே ஆப்பு வச்சுட்டா என்று முத்து சொல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.