விசித்ரா படுக்கையறை ரூமுக்குள் புகுந்த நடிகர்.. அய்யய்யோ அவர் ரொம்ப நல்லவர் வக்காலத்து வாங்கும் 80’ஸ் நடிகை..

Bigg Boss Vichitra: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் ஹீரோவுக்கு என் பெயர் கூட தெரியாது இந்த படத்துல நான் நடிக்கிறேன் நீ ரூமுக்கு வா என்று மட்டும் கூறிய அழைத்தார்.

அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன் அப்பொழுது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார். மாலை ஆனால் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார் அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றியது ஹோட்டல் மேலாளர் தான்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக மாறி விசித்ரா தங்கியுள்ளார்.

பெருந்தொகைக்கு விடாமுயற்சி – யை தட்டிச் சென்ற OTT நிறுவனம்.? சாட்டிலைட் உரிமை, இசை ரைட்ஸ் யார் வாங்கினார் தெரியுமா..?

இவ்வாறு இதற்குப் பின்னர் அந்த ஹீரோவின் மீது கேஸ் கொடுக்கும் எதுவும் நடக்கவில்லை எனவே இதற்கு மேல் சினிமாவில் இருக்க கூடாது என்பதற்காக சினிமாவை விட்டு நின்றார். தற்பொழுது வரையிலும் படங்களில் நடிக்கவில்லை இந்த சம்பவத்திற்கு பிறகு தான் விசித்ரா திருமணம் செய்துக் கொண்டார்.

இவ்வாறு விசித்ரா சொன்னதை வைத்து நெட்டிசன்கள் அந்த ஹீரோ பாலகிருஷ்ணா என கண்டுபிடித்து அவரை சோசியல் மீடியாவில் பங்கம் செய்து வந்தனர். இளம் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் பாலகிருஷ்ணன் இது போன்ற சில்மிஷன் வேலைகள் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இவர் செய்த பல வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 80களில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த டிஸ்கோ சாந்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரசியமான பேட்டியளித்துள்ளார். அதில், செய்தியாளர் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா கூறிய புகார் குறித்த கேள்வி எழுப்ப அதற்கு அவர் அந்த மாதிரி என்னிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் செருப்பால் அடித்து இருப்பேன்.

எல்லாமே ஓகே பட வாய்ப்பு வேணும்னா மகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்.. நடிகையின் அம்மாவிடமே கோரிக்கை வைத்த இயக்குனர்.. பகீர் கிளப்பிய கவர்ச்சி நடிகை..

நாம தைரியமா இருந்தால் யாரும் நம்மிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் விசித்ரா நல்ல தைரியமான பெண்தான் ஏன் பயந்தார் என்று எனக்கு தெரியவில்லை. நான் பாலகிருஷ்ணாவின் அப்பா கூட நடித்து இருக்கிறேன் தெலுங்கில் நான் போன புதிதில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன் அப்பொழுது எனக்கு அந்த டான்ஸ் மாஸ்டர் பார்க்க பயமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.

அப்பொழுது பாலகிருஷ்ணா தான் பயப்படாதே என்றார் அதேபோல் ஹோட்டலுக்கு செல்ல வண்டி இல்லாததால் படப்பிடிப்பு நடந்த அந்த ஐந்து நாளும் என்னையும் மேக்கப் மேனையும் ஹோட்டலில் பத்திரமாக இறக்கி விடுவார் அந்த அளவுக்கு பாலகிருஷ்ணா நல்ல மனிதர் எனக் கூறியுள்ளார்.