பேச்சில மட்டும் நாகரீகம் இருந்தா போதாது, உடையிலும் நாகரீகம் தேவை.. ஸ்ருதியின் செயலால் தலை குனிந்த அண்ணாமலை – சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai today episode January 1 : இன்றைய எபிசோடில் பாட்டி ஊருக்கு கிளம்புகிறேன் என்று சொன்னதும், விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு நினைச்சேன், கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார். உடனே பாட்டி  என்ன சந்தோஷம் என்று சொல்லிக்கிட்டு இருக்க என கேட்க இல்ல..

ஊருக்கு போறேன்னு சொன்னீங்க இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போனா சந்தோஷம் என்று சொன்னேன் என விஜயா மாத்திவிட்டார். பிறகு பாட்டி மீனாகிட்ட போய் பேசிட்டு வரேன் என்று ரூமுக்கு வந்து மீனா விடம் முத்துவுக்கு ஏதாவது அதிக கடன் பிரச்சனை இருக்கா எங்க உன்னோட தாலி, தாலி செயினை வாங்கி அடமானம் வச்சுட்டானா என்று கேட்க மீனா பாட்டி கடன் எல்லாம் எதுவும் இல்ல, தாலி செயின் அத்தை கிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்ல பாட்டி ஏன் என கேட்கிறார்.

Happy New Year 2024 : தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றஹாப்பி நியூ இயர் பாடல்.. உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும்..

பிறகு மீனா நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு பாட்டி விஜயா அந்த அளவுக்கு பேசிட்டாளா நீ ஏன் கழட்டி கொடுத்த அது என்னோட பையன் போட்டது தானே என்று கேட்க அவங்க அடிக்கடி சொல்லி காமிச்சுக்கிட்டு இருந்தாங்க அதோட எங்க அப்பாவ பத்தி தப்பா பேசினாங்க அதனாலதான் கழட்டி கொடுத்துட்டேன் என்று மீனா சொல்கிறார்.

பிறகு பாட்டி முத்துவையும் கூப்பிட்டு இவ்வளவு நடந்து இருக்கு நீ சும்மாவா விட்ட என்று கேட்க அன்னைக்கு மீனா அம்மாவை செம்ம பேச்சி பேசிட்டா,  நான் அவளுக்கு வேற நகை வாங்கி கொடுத்துகுறேன் என்று சொல்ல பாட்டி நான் கொஞ்சம் பணம் வச்சிருக்கேன் தர அதுல தாலியாவது வாங்கி கொடு என்று கேட்க நீ அதை உன்னோட செலவுக்கு வச்சுக்க, நான் சம்பாதிச்சு வாங்கி கொடுத்திருக்கிறேன் என்று முத்து சொல்கிறார்.

புத்தாண்டில் புதிய திரைப்படங்களை வெளியிட்டு டிஆர்பி-யில் மாஸ் காட்டப் போகும் தொலைக்காட்சிகள்.. எந்த டிவியில் என்ன படம் தெரியுமா?

பிறகு நான் ஊருக்கு போறேன் எல்லாரும் பொங்கலுக்கு வந்துடனும் என்று சொல்கிறார். மேலும் ரோகினி, ஸ்ருதி, மீனா மூன்று பேரையும் நீங்க எப்பவுமே அக்கா தங்கச்சி மாதிரி இருக்கணும் யாரு சொல்றதையும் கேட்காதீங்க என்று அறிவுரை சொல்கிறார். மேலும் விஜயாவுக்கும் வீட்டுக்கு வந்த மூன்று மருமகளையும் ஒரே மாதிரி பாரு என்றும் சொல்லிவிட்டு பாட்டி ஊருக்கு கிளம்பி விட்டார்.. அடுத்து இரவு சுருதி குட்டியோடு டிரஸ் போட்டுக்கொண்டு வெளியே வந்து ரூம்ல கொசு அதிகமா இருக்கு, நீங்க ஹால்ல வேற தூங்குறீங்க எப்படி கொசுக்கடியில் இருப்பீங்க என்று கொசுவை விரட்டி கொண்டிருக்கிறார்..

அப்போது ஸ்ருதியின் டிரசை பார்த்து அண்ணாமலை தலை குனிந்து உட்கார்ந்திருக்கிறார். பிறகு விஜயா நீ முதல்ல ரூமுக்கு போமா எங்களுக்கு கொசுக்கடி வந்தாலும் பரவால்ல அவருக்கு திரும்ப நெஞ்சு வலி வர வச்சுராத என்று ஸ்ருதியை ஓரமாக கூட்டிட்டு போய் உனக்கு வேற டிரஸ் இல்லையா என்று கேட்க எனக்கு புடிச்ச டிரஸ் தான் நான் போட்டு இருக்கேன், இதுல என்ன இருக்கு என்று சுருதி சொல்கிறார்.

பிறகு மீனா சுருதி தனியாக கூட்டிட்டு போய், நீ எங்கேயாவது ரவி கூட போகும்போது இல்ல உன் பிரண்ட்ஸோட போகும்போது உனக்கு புடிச்ச மாதிரி டிரஸ் போட்டுக்கலாம் நம்ம கூட்டு குடும்பத்தில் இருக்கோம் அதனால மத்தவங்க மதிக்கிற மாதிரியும் டிரஸ் போடணும் என்று சொல்ல ஸ்ருதி நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல நான் டிரஸ் பண்றது என்னோட விருப்பம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார் இதோடு இ ன்றைய எபிசோட் முடிந்துள்ளது..