நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 6 : இன்றைய எபிசோடில் ரவியும், ஸ்ருதியும் வீட்டிற்கு வர அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு எல்லாம் விஜயா செய்து முடித்துவிட்டு பிறகு மீனாவிடம் இன்னைக்கு நைட்டு ரவி ஸ்ருதிக்கு  ஃபர்ஸ்ட் நைட் ரெடி பண்ணனும் அவங்களுக்கு ரூம் இல்ல..

அதனால உங்க ரூம ரெண்டு, மூணு நாளைக்கு அவங்களுக்கு கொடுங்க என்று கேட்க மீனா இது முத்துக்கு தெரிஞ்சா கோபப்படுவாரு அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்று சொல்வதற்கு விஜயா அதெல்லாம் வந்ததும் சொல்லிக்கலாம் இப்ப நீ அந்த ரூமுக்கு பூவெல்லாம் போட்டு ரெடி பண்ணி வை என்று சொல்ல.. மீனாவும் ரெடி பண்ணி வைக்கிறார்..

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

பிறகு முத்து வீட்டிற்கு வந்ததும் அவருடைய ரூமை பார்த்துவிட்டு என்ன மீனா ரூம இப்படி டெக்கரேட் பண்ணி வச்சிருக்க நான் உன்கிட்ட சண்டை போட்டு திரும்ப பேசினதால சமாதானப்படுத்துவதற்காக இந்த மாதிரி பண்ணி வச்சிருக்கியா இந்த ஐடியா நல்லா இருக்கு என்று சொல்ல பிறகு மீனா ரவி – ஸ்ருதிக்கு ஃபர்ஸ்ட் நைட் இந்த ரூம்ல தான் நடக்க போகுது அதுக்காக தான் இப்படி ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்ல..

அந்த ஓடிப் போனவனுக்கு நம்ம ரூம் தான் கிடைச்சதா நம்ம ரூம்ல உன்ன யாரு ரெடி பண்ண சொன்னா என்று கேட்க அத்தை தான் ரெடி பண்ண சொன்னாங்க என்ன சொல்வதும் பிறகு அவங்க அம்மாவை கூப்பிட்டு கேட்கிறார் ஒரு ரெண்டு மூணு நாள் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று அவரும் சொல்ல..

இரவு நேர சமையல் மந்திரம் கிரிஜாவா இது.! என்னமா இருக்காங்க பார்த்தீர்களா..

பிறகு முத்து மீனாவிடம் நீ எல்லாத்துக்கும் பாவம் பார்த்துட்டு இருந்தினா அப்புறம் உனக்கு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க அவங்க கல்யாணம் நடந்த அப்ப உனக்கும் எனக்கும் சண்டை வந்து உங்க அம்மா வீட்ல இருந்த இப்ப அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்துடுச்சு நீ ஹாலுக்கு வந்துட்ட போற போக்கு பார்த்தா இனிமே என்ன நடக்க போகுதுன்னு தெரியல என்று சொல்லிவிட்டு முத்து மாடியில் போய் தூங்க போய்விட்டார்..

அடுத்து ரவி, ஸ்ருதியும் வீட்டிற்கு வந்ததும் ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க இன்னைக்கு உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் ரெடி பண்ணி வச்சிருக்கோம் என ஸ்ருதியிடம் சொல்வதற்கு அதுதான் எங்களுக்கு ஏற்கனவே முடிஞ்சிடுச்சு அப்புறம் எதுக்கு என்று கேட்கிறார் இதை கேட்டு விஜயாவும்,ரோகினியும்ம் சிரிக்கின்றனர் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.