இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

Dhanush : நடிகர் தனுஷ் சினிமா கேரியரை தூக்கிவிட்டது செல்வராகவன் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் தான் தனுஷ் நடித்த வந்தார். அந்த வகையில் செல்வராகவன் இயக்கிய சில திரைப்படங்கள் தனுஷ் அவர்களுக்கு வெற்றி திரைப்படமாக உருமாறியது. தனுசை பார்த்து இவன் எல்லாம் ஹீரோவா இவன் படத்தை எல்லாம் பார்க்கணுமா என கேலியும் கிண்டலும் செய்த   காலமும் உண்டு.

ஆனால் இப்பொழுது தனுஷ் லெவலே வேறு முன்னணி நடிகர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் பாலிவுட் என கலக்கி கொண்டு இருக்கிறார். அதேபோல் நடிகர் தனுஷின் சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது  3 திரைப்படம். தனுஷ் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நடிகை சுருதிஹாசன் என அனைவருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இரவு நேர சமையல் மந்திரம் கிரிஜாவா இது.! என்னமா இருக்காங்க பார்த்தீர்களா..

அதேபோல் மூன்று திரைப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கினார் இந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசபால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்து வாழப் போவதாக கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் இதனால் தற்பொழுது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல் தனுஷ் தன்னுடைய கேரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அதுவும் ஐஸ்வர்யா ரஜினி அவர்களும் படத்தை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் மூன்று திரைப்படம் 11 வருடங்கள் கழித்து மீண்டும் திரையரங்கில் செய்யப்பட்டது இதற்கு நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப்பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரிலீஸ் செய்யப்பட்டதும் நான் எமோஷனல் ஆகிவிட்டேன் அனைவருக்கும் கோடான கோடி நன்றி என பதிவிட்டுள்ளார்.

19 வயதிலேயே பேரையும், புகழையும் சம்பாதித்த அனிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இவர் பதிவை பார்த்த சில ரசிகர்கள் மறைமுகமாக தன்னுடைய மனைவிக்கு தான் தனுஷ்  நன்றி கூறி இருக்கிறாரா என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என கோரிக்கையும் வைத்து வருகிறார்கள்.