விஜயாவை எதிர்த்து பேசிய மீனா.. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கே -சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 21 : இன்றைய எபிசோடில் சுதா சுருதிக்காக 50 பவுன் நகை கொடுக்கிறார்.. அண்ணாமலை நகை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல ஏற்கனவே உங்க இரண்டு மருமகளும் நகை போட்டு வந்திருப்பாங்க இல்ல அந்த மாதிரி இது என்னோட பொண்ணுக்கு கொடுக்க வேண்டியது தான் என்று சொல்வதற்கு விஜயா ரோகினி ஓட அப்பா மலேசியாவுல பணக்காரர்..

அவரு பொங்கலுக்கு வருவாரு,  அவர் பொண்ணுக்கு நிறைய செய்வாரு ஆனா மீனா எங்க நகை போட்டு வந்தா, நாங்க தான் நகை போட்டு கூட்டிட்டு வந்தோம் அவங்க அப்பா ஒன்னும் அவளுக்கு சேர்த்து வைக்கல அவர் செத்ததால தான் இந்த கல்யாணமே நடந்தது ஒரு வேளை அவர் இருந்திருந்தால் மீனாவுக்கு கல்யாணமே ஆகியிருக்குமான்னு தெரியல என்று சொல்கிறார்.

அவள அடையறதுக்கு தான் பிக் பாஸ் வந்தியா.. ரவீனா-மணியை வண்ட வண்டையாக கேட்கும் பேரன்ட்ஸ்… இதைவிட ஒரு அசிங்கம் தேவையா..

இதைக் கேட்டு மீனாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் பிறகு ரூமிற்கு சென்று விட்டார்.. கொஞ்ச நேரம் கழித்து மீனா சாமி ரூமில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா என்ன இங்க உட்கார்ந்து இருக்க, சமையல் வேலை செய்யலையா என்று கேட்க உங்களுக்கு வேலை செய்யறதுக்கு மட்டும் தான் நான் தேவையா என்று விஜயாவிடம் எதிர்த்து பேசுவதால் என்ன இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க..

மீனா நீங்க சொல்ற வேலை எல்லாம் செஞ்சு கிட்டு நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன், ஆனா நீங்க அதுக்காக  என்ன எது வேணாலும் பேசலாமா என்ன பத்தி சொன்னாலும் நான் பொறுத்துபேன், எங்க அப்பாவ பத்தி எல்லாம் பேசுறீங்க அவர் என்ன பண்ணாரு அவர் இருந்தவரயும் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாரு.. என்று சொல்ல விஜயா நான் என்ன தப்பா சொல்லிட்டேன் நீ ஒரு நகையும் போட்டு வரல உனக்கு நாங்க தானே நகை போட்டு கூட்டிட்டு வந்தோம்..

பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளருக்கு டப் கொடுக்கும் விசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? பலருக்கும் தெரியாத தகவல்

இது உண்மை தானே என்று கேட்க மீனா இப்ப என்ன உங்களுக்கு நகதான பிரச்சனை இருங்க என்று ரூமுக்கு போய் தாலி சேயினை கழட்டிவிட்டு மஞ்சள் கயிறு போட்டுக் கொண்டு வந்து இந்தாங்க நீங்க போட்ட செயின் எனக்கு வேண்டாம் என்று கொடுக்கிறார். அண்ணாமலை இப்ப ஏன் இத கழட்டுன போட்டுகோம்மா என்று சொல்ல இல்ல வேணாம் மாமா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது முத்துவும் அங்கு வந்து என்னாச்சு என்று கேட்க மத்த ரெண்டு மருமகளும் நிறைய நகை போட்டு வந்தாங்களாம், எனக்கு இவங்க தான் நகை போட்டு கூட்டிட்டு வந்தாங்களாம் ஒன்னும் இல்லாதவங்க என்று அசிங்கமா பேசுறாங்க அதனால தான் இந்த செயின் எனக்கு வேண்டாம் என்று கழட்டி கொடுத்துட்டேன் என மீனா முத்துவிடம் சொல்கிறார்..

பிறகு விஜயா தாலி குண்டுமணி எல்லாமே நாங்க தான் போட்டோம் என்று சொல்ல மீனா நீங்க இப்படி கேப்பிங்கன்னு தெரியும் அதனால தான் அதையும் கழட்டி எடுத்துட்டு வந்திருக்கேன் என்று அதையும் வைத்துவிட்டு இனிமே என் உடம்பில் நகண்ணு ஏறுனா அது என் புருஷன் சம்பாதிச்சதா தான் இருக்கணும் என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விட்டார்.

பிறகு முத்துவும் ரூமுக்கு வந்து நீ சொன்னது தான் மீனா கரெக்ட் இவ்வளவு தைரியமா பேசின, உனக்கு நான் நகை வாங்கி தரேன் அவங்களோட நகை தேவை இல்ல உனக்கு என்னென்ன நகை வேணும்னு இந்த நோட்ல எழுதி கொடு என்று சொல்கிறார், மீனாவும் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறார் பிறகு முத்து இப்ப என்கிட்ட காசு இல்ல இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு உனக்கு நகை வாங்கி தரேன்..

முதல்ல தாலி வாங்கணும் அப்புறம் மத்ததெல்லாம் வாங்கிக்கலாம் என்று மீனா எழுதிய அந்த நோட்டை வாங்கிக் கொண்டு போய் காரில் வைத்துக் கொண்டார்.. அடுத்து விஜயா பார்வதி வீட்டிற்கு போய் வீட்டில் நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..