இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோஷமா இருப்ப முத்துவை பார்த்து சொன்ன சுதா.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 18 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி அவங்க அம்மாவிடம் ஃபோனில் பேசும் போது மாடியில டெண்டு கழட்டிகிட்டு இருக்கேன், நானும் ரவியும் நைட்டு இந்த டெண்டுக்குள்ள தான் தூங்குனோம் எங்களுக்கு ரூம் தராமல் முத்து ரூம பூட்டி வச்சுட்டாரு, என்று சொல்ல உடனே சுதா கோபப்பட்டு போனை வைத்து விட்டார் பிறகு வாசுதேவனிடம் இதை சொல்வதற்கு நம்மை விட்டுட்டு ஸ்ருதி போனால கஷ்டப்படட்டும் அப்பதான் நம்மளோட அருமை தெரியும்..

முதல்ல அந்த வீடு அண்ணாமலையிது இல்ல, அவனோட பொண்டாட்டியோடது தான் ஃபர்ஸ்ட் கீழ் போர்ஷன் மட்டும் தான் இருந்தது என்கிட்ட கைநீட்டி காசு வாங்கி தான் மேல் போர்ஷனை அண்ணாமலை கட்டினான் இப்ப என் பொண்ணு அங்க வாழறதுக்கு ரூம் இல்ல என்று சொல்ல சுதா வாங்க நம்ம அங்க போய் பேசலாம் என்று கேட்க வாசுதேவன் நான் அவன் வீட்டுக்கு வரல என்று சொல்லிவிட்டார்.

ஏம்மா ராகினி இன்னுமா உனக்கு கண்ணு தெரியல.! உன் புருஷன் வாங்கினது போதாதா நீயும் வாங்கி கட்டிக்கனுமா..

பிறகு சுதா கோபமாக ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார்.. வீட்டுக்கு வந்ததும் ஸ்ருதி வாங்க மம்மி சொல்லாம வந்து இருக்கீங்க என்று சொல்ல.. நீ சந்தோஷமா இருக்கணும்னு தானே இங்க கொண்டு வந்து விட்ட ஆனா நீ இங்க சந்தோஷமா இல்ல வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார் ஸ்ருதியும் ஏன் அம்மா இப்படி பண்றாங்க என்று தெரியாமல் இருக்கிறார்.

பிறகு விஜயா, மீனா, ரோகிணி எல்லோரும் வந்து வாங்க என்று கூப்பிட என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தானே வந்து விட்ட ஆனா அவளுக்கு ஒரு ரூம் கூட தராம மாடியில் தங்க வச்சிருக்கீங்க உங்க புருஷன் என் வீட்டுக்காரர் கிட்ட கை நீட்டி பணம் வாங்கி தான் இந்த வீட்டை கட்டினாரு மூணு பிள்ளைங்களை பெக்க தெரியுது இல்ல அதுக்கு தகுந்த மாதிரி மூணு ரூம் கற்றது இல்லையா என்று சொல்வதும்..

அவரை யாராவது அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது.. அஜித் ஒரு மாதிரியான கேரக்டர் – பிரபல இயக்குனர் பேச்சு

அப்பொழுது முத்து வெளியில் இருந்து வீட்டிற்கு வந்து எங்க அப்பா என்ன உன் புருஷன் வீட்டு காச வாங்கினாரா, இல்ல உங்க அப்பா வீட்டு காச வாங்குனாரா ரயில்வே என்ன உங்க புருஷனுதா எங்க அப்பா அவரு உழைச்சு சம்பாதிச்ச காசு அது, நீங்களும் தான் பெரிய வீடா வச்சிருக்கீங்க பத்து ரூம் இருக்கும் இல்ல, ஏன் ஒத்த புள்ளைய பெத்து போட்டீங்க என்று சுதாவிடம் சண்டைக்கு போக உடனே சுதா இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோஷமா இருப்ப வா சுருதி என்று கூப்பிடுகிறார்.

பிறகு முத்து ஆச்சுட்டு போங்க ரவி நீயும் போடா வெளிய போங்க என்று சத்தம் போடுகிறார்.. அப்பொழுது அண்ணாமலை வீட்டிற்கு வந்து வாங்க என்ன ஆச்சு உட்கார்ந்து பேசலாம் என்று கூப்பிடுகிறார் பிறகு சுதா என் பொண்ணுக்கு ரூம் இல்லாம மாடில போய் தூங்கி இருக்கா என்று சொல்வதும் நாங்க தான் ரூம் குடுத்துட்டோமே என்ன ஸ்ருதி என்று கேட்க, பிறகு சுருதி ரூம் பிரச்சனை வந்தது உண்மைதான் பிறகு மாமா எங்களுக்கு ரூம் குடுத்துட்டாரு. டெண்டு வாங்கியாச்சின்னு சும்மா போய் படுத்து இருந்தோம்..

அதை சொல்லி முடிக்கறதுக்குள்ள நீ போன் கட் பண்ணிட்ட அம்மா, என சொல்வதும் முத்து சுதாவிடம் இப்ப உண்மை என்னன்னு தெரிஞ்சதா இப்ப பேசுங்க என்று கத்துகிறார். பிறகு அண்ணாமலை என்னதான் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட நீ கோபப்பட்டு பேசுவது தப்பு அவங்க கிட்ட மன்னிப்பு கேளு என்று முத்துவிடம் சொல்கிறார். ஆனால் முத்து நான் எந்த தப்பும் பண்ணலை நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

பிறகு சுதாவும் அமைதியாகிவிட்டார் அடுத்து முத்து கார் ஷெட்டுக்கு போய் செல்வத்திடம் நடந்தவற்றை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் பிறகு செல்வமும் முத்தும் குடிப்பதற்காக பாருக்கு காரில் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது முத்து செல்வத்திடம் புலம்பி கொண்டு இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..