ஏம்மா ராகினி இன்னுமா உனக்கு கண்ணு தெரியல.! உன் புருஷன் வாங்கினது போதாதா நீயும் வாங்கி கட்டிக்கனுமா..

thamizhum saraswathiyum today episode december 18 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமாவை அரெஸ்ட் செய்து விட்டார்கள் போலீஸ் அதனால் பதறி அடித்து ஓடி வருகிறது அர்ஜுன் குடும்பம் அப்பொழுது அர்ஜுனை பார்த்து அழுகிறார்கள் ராகினி என் எதற்காக உங்களை ஜெயிலில் பிடித்து வைத்திருக்கிறார்கள் என கேட்க உங்கள் அண்ணன் தமிழ் தான் இதற்குக் காரணம் எனக் கூறுகிறார்.

உடனே போலீஸ் வந்தவுடன் எதற்காக என் கணவரை உள்ளே வைத்தீர்கள் அவர் எந்த தப்பும் செய்யவில்லை இது குடும்ப பிரச்சனையால் இப்படி நடந்தது எனக் கூற உன்னுடைய புருஷனே செஞ்ச தப்பை  ஒப்புக்கொண்டார் என கூறுகிறார். உடனே ராகினி நீங்க அந்த வண்டியை கடத்துனீங்களா என கேட்க ஆமாம் என கூறுகிறார் எனக்கு வேறு வழி தெரியவில்லை எப்படியாவது நம்மளுடைய ஆர்டர் நம்மளை விட்டுப் போகக்கூடாது என நினைத்து அதற்காக தான் வண்டியை கடதினேன் ஆனால் இது மிகப்பெரிய அடியாக விழுந்துவிட்டது எனக் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் கோதை, நமச்சி, கார்த்தி, வசு, சரஸ்வதி என அனைவரையும் யூனியன் ஆபீஸ்க்கு வர சொன்னார் மேகனா அப்பொழுது யூனியன் ஆபீஸ்ல அனைவரும் வந்துள்ளார்கள் அந்த சமயத்தில் ஏற்கனவே தமிழை அவமானப்படுத்திய இரண்டு நபர்களுக்கு புரிய வைப்பதற்காக தான் மேகனா அனைவரையும் வர சொன்னார் அப்பொழுது தமிழ் எந்த தவறும் செய்யவில்லை அந்த அர்ஜுன் தான் லாரியை கடத்தியது அந்த மெட்டீரியலையும் நாங்கள் சேர்க்க வேண்டிய நேரத்தில் கரெக்டாக சேர்த்து விட்டோம் இப்பவாவது தமிழ் பேச்சுக்கு கட்டுப்படுறீங்களா என மேகனா கேட்க அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள்.

இதனால் கோதை குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது ஆனால் மேகனா அனைத்தையும் செய்து விட்டு கிளம்புகிறார் ஆனால் தமிழ் சோகமாக இருக்கிறார் ஏன் என்று கேட்க உடனே தமிழ் கம்பெனி இழுத்து மூடிட்டாங்க அந்த அர்ஜுன் பண்ண தப்பால என  பேசுகிறார். வீட்டிற்கு வந்த அனைவரும் அர்ஜுன் பண்ணியதால் கம்பெனி இழுத்து மூடி விட்டார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது நமச்சி  இன்னும் ஒரு வருடத்திற்கு  வெளியில் வர முடியாது என பேச அந்த சமயத்தில் ராகினி வருகிறார்.

ராகினி எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்னு சந்தோஷத்துல இருக்கீங்களா இதை  நான் சும்மா விடமாட்டேன் இனிமே உங்களுக்கு எதிரி நான் தான் அந்த கம்பெனியை நானே எடுத்து நடத்துறேன் என ராகினி சபதம் போடுகிறார் அந்த சமயத்தில் கார்த்தி உனக்கு என்ன பிசினஸ் பத்தி தெரியும் நீ நடத்துறனு சொல்ற என கேட்கிறார் அதற்கு ராகினி தவறாக புரிந்து கொண்டு மேலும் வார்த்தையை விட்டு விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழைப் பார்த்து எனக்கு எதிரி இனிமே நீ மட்டும் தான் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் இதனால் தமிழ் உடைந்து போய் நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.