மாடியில் டென்ட் போட்டு தூங்கிய ரவி – ஸ்ருதி.. கோபத்தில் இருக்கும் சுதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 16 : இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதி இடம் என்ன நம்பி இந்த வீட்டுக்கு வந்த, ஆனால் ரூம்காக  எவ்வளவு பிரச்சனை நடக்குது என்று சொல்ல ஸ்ருதி நான் அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல எனக்கு உன் கூட இருக்கிறது தான் சந்தோஷம் இது போதும் என்று சொல்கிறார்.

பிறகு முத்து மீனா கிட்ட ரவியாலா அப்பா வெளிய தூங்குற மாதிரி ஆயிடுச்சு நம்ம ரூம் எடுத்துக்க சொன்னா அதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். பிறகு காலையில சீக்கிரம் சவாரிக்கு போகணும் தூங்கலாம் என்று முத்துவும் மீனாவும் தூங்குகின்றனர்.

நடிகர் நடிகைகளின் பலான வீடியோ.. ரூமுக்கு வந்தீங்கன்னா பாக்கலாம்.. தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்.!

அடுத்து நடு ராத்திரியில் ஸ்ருதி ரவியை எழுப்பி ஒரு சர்ப்ரைஸ் இருக்கு மொட்டை மாடிக்கு வா என்று இழுத்துட்டு போகிறார். அங்கு ஸ்ருதி சின்னதாக ஒரு டெண்டு போட்டு வைத்திருக்கிறார்.. இது எதுக்கு என்று ரவி கேட்ட உங்க அண்ணன் ரூம்ம பூட்டிட்டு போயிட்டதால வீட்டுக்கு வந்தா நமக்கு தூங்க இடம் இருக்குமான்னு தெரியல அதனாலதான் இந்த டெட்டு வாங்கி வச்சிருந்தேன்.

இன்னைக்கு நைட்டு இதுல தான் தூங்கணும்னு நான் மென்டலி பிரிப்பர் ஆயிருந்தேன் அதனால தான் ரெடி பண்ணினேன் இங்கயே தூங்கலாம் வா என்று டெண்டு உள்ளே போகின்றனர்.. பிறகு ஸ்ருதி கிட்ட எங்க அண்ணன்  ரூம்மை புட்டுனதால நீ ரொம்ப கோபப்படுவேன் நினைச்ச ஆனா நீ இப்படி யோசிச்சிருக்க என்று சந்தோஷமாக பேசிவிட்டு தூங்குகின்றனர்.

அடுத்த நாள் காலையில் விஜயா மீனாவிடம் காபி போட்டு தர சொல்லி எடுத்துக்கொண்டு போய் ரவி இருந்த ரூமை தட்டுகிறார், பிறகு ரூமை திறந்து உள்ளே பார்ப்பதும் யாரும் இல்லை எங்க போயிருப்பாங்க என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.. அடுத்து மனோஜ் எக்ஸ்சைஸ் செய்கிறேன் என்று மொட்டை மாடிக்கு போன பொழுது அங்கே டென்ட் போட்டு இருப்பதை பார்த்து..

உங்க கருத்தை விட உங்க டிரஸ் செம டக்கரு.. கேரளா சேச்சி கெட்டபில் தர்ஷா குப்தா குப்தா..

யார் நம்ம வீட்ல வந்து டென்ட் போட்டு இருக்காங்க என்று கீழே ஓடி வந்து எல்லோரிடமும் சொல்லி திருடனாய் இருக்கும் போல என்று சொல்லுகின்றனர் பிறகு எல்லோரும் மாடிக்குப் போய் பார்க்கின்றனர் அங்கு டெண்டு போட்டு இருக்கிறது.. உள்ளிருந்து சத்தம் கேட்கிறது.

திருடன் தான் இருப்பாங்க என்று எல்லோரும் குச்சி எடுத்து அடிக்க பார்க்கின்றனர்.. அப்போது ரவியும் ஸ்ருதியும் திறந்து நாங்க தான் என்று சொல்கின்றனர் பிறகு கீழே வந்து அண்ணாமலை இடம் முத்து ரூம பூட்டி வைத்திருந்ததால இந்த டெண்டு வாங்கினேன்.. இதுல தான் நாங்க இன்னைக்கு நைட்டு தூங்கணும்னு பிரிப்பர் ஆகிட்டோம் அதனால தான் போய் தூங்குனோம் என்று சொல்கின்றனர்..

பிறகு சுதா ஸ்ருதிக்கு போன் பண்ணி உங்க மாமியார் வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆச்சு போனே பண்ணல மறந்துட்டியா என்று கேட்கிறார் பிறகு என்ன பண்ற என்று கேட்க டென்ட் கழட்டிட்டு இருக்கேன் நைட்டு நானும் ரவியும் மாடியில் டென்ட் போட்டு தான் தூங்குனோம் என்று சொல்ல அந்த அண்ணாமலை உங்களை டெண்டுல தூங்க வச்சுட்டாரா மிடில் கிளாஸ் ஃபேமிலி எல்லாம் இப்படித்தான்..

அதுக்கு தான் படிச்சு படிச்சு ஏற்கனவே சொல்லி இருந்த நீ தான் கேட்காம போயிட்ட நான் வந்து பாத்துக்குறேன் என்று சுதா போனை கட் பண்ணி விட்டார். பிறகு ஸ்ருதி முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள போன கட் பண்ணிட்டாங்களே என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.