மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 14 : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்த ரூமை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் அதனால் ரவி ஸ்ருதி சாயந்திரம் வந்தா நான் என்ன சொல்றது அவளை தங்க வைக்க கூட எனக்கு ரூம் இல்ல, நாங்க பழைய வீட்டுக்கு போறோம் என்று சொல்லிவிட்டு ஸ்ருதிடம் சென்று வீட்டில் நடந்த பிரச்சனையை சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதி உங்க அண்ணன் அவங்க ரூமைதான பூட்டி வச்சுருக்காரு இதனால எனக்கு ஒன்னும் கோவம் இல்ல சில பொருள் எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு ஒரு இடத்துக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு கடைக்கு செல்கின்றனர்.. அடுத்து விஜயா மீனாவிடம் நீ இல்லாம ஒரு நாள் கூட முத்து இருக்க மாட்டானா.?

ரவீனாவிற்கு சப்போர்ட் செய்ததால் பூர்ணிமாவிடம் சண்டை போடும் சூனியக்காரி.!

அந்த அளவுக்கு பழக்கி விட்டு இருக்கியா நீ சொல்லி தான் முத்து ரூம போட்டுனானா என்று கண்டபடி திட்டுகிறார். அதனால் மீனா முத்துவுக்கு ஃபோன் பண்ணுகிறார் ஆனால் முத்து போன் எடுக்கவில்லை பிறகு ஒரு முறை முத்து போனை எடுத்து என்னவென்று கேட்க நீங்க ரூம் பூட்டிட்டு போயிட்டதால எனக்கு தான் பிரச்சனை வீட்டுக்கு வந்து அந்த ரூமை திறந்து விடுங்கள் என்று கேட்க..

சரி வரேன் என்று முத்து வீட்டிற்கு வருகிறார். வந்ததும் விஜயா ரூமை துறந்துவிடு என்று கேட்க நானும் மீனாவும் மாடியிலயும் ஹால்லயும் தூங்கணுமா, அப்பாவ அசிங்கப்படுத்தின அவங்களுக்கு எங்க ரூமா அதெல்லாம் திறந்து விட முடியாது நான் சாப்பிட்டு போறதுக்காக வந்தேன் என்று சொல்கிறார்.

மகளைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பும் கதிர்… யோவ் நீ பெத்த பிள்ளை தானே இது புருஷனை கண்டபடி ஏசும் நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல்

பிறகு மனோஜம் ரோகிணியும் ரூமத் திறந்து விடுங்கள் என்று கேட்க உங்க ரூம  நீங்க கொடுப்பீங்களா என்று முத்து பதிலுக்கு கேட்பதும் அவர்கள் ஒன்னும் சொல்லவில்லை.. அடுத்து மீனா நீங்க பாட்டுக்கு பூட்டிட்டு போயிட்டீங்க என்னதான் அசிங்கமா பேசுறாங்க என்று நடந்தவற்றை முத்துவிடம் சொல்வதற்கு யார் இந்த மாதிரி பேசி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும் என்று விஜயாவை பார்த்து..

முத்து நீங்க மீனாவ பார்த்து பேசின வார்த்தை எல்லாம் மத்த ரெண்டு மருமகள் கிட்ட பேச முடியுமா பேசி இருந்தா அவ்வளவுதான் ஏழை பொண்ணு என்றதால் உங்களுக்கு இளக்காரமா போச்சு என்று அம்மாவை திட்டுகிறார் பிறகு அண்ணாமலையும் அப்பொழுது வீட்டிற்கு வந்து நடந்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டு..

விஜயாவிடம் ஏன் மீனா கிட்ட இப்படி நடந்துக்கிற எனக்கு நம்ம வீட்டு மருமகள பத்தி கூட கவலை இல்லை உன்னை பற்றி தான் கவலை இப்படியே போயிட்டு இருந்தா எல்லோரும் பிரிந்து தனித்தனியா போயிடுவாங்க என்று விஜயாவை திட்டுவிட்டு பிறகு ரூம் பிரச்சனையே நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..