சத்தியா முகத்தில் பிச்சை காசு என பணத்தை வீசிய முத்து..முத்து மேல் ரோகிணிக்கு வந்த சந்தேகம்.. ஒட்டுக்கேட்ட மீனா

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது சத்தியா முத்துவிடம் பேச வேண்டும் எனச் சிட்டியுடன் வந்து கேட்கிறார் உடனே சத்யா முத்து அருகில் சென்று பையில் இருந்து பணத்தை எடுத்து வைக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பணத்தால் தானே என் கைய ஒடச்ச உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்சா பணத்தை திரும்பி கொடுத்துட்டேன் என பேசுகிறார்.

அப்புறம் இனிமே உனக்கும் எனக்கு எதுவுமே கிடையாது இந்த தேவை இல்லாம அட்வைஸ் பண்றது எல்லாம் விட்டுக்கோ அதே மாதிரி எங்க அக்கா கிட்ட சொல்லி பின்னாடி இருந்து அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத எனக் கூறுகிறார் அதற்கு முத்து நீயே ஒரு பொறம்போக்கு உனக்கெல்லாம் யார் அட்வைஸ் பண்ணுவா? நான் உங்க அக்காவை அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது எனக் கூற மீண்டும் அதையே சொல்ல முத்துவுக்கு கோவம் வருகிறது.

குடும்பத்தையே சின்னாபின்னமாக்க கார்த்தியை பகடைக்காயாக மாற்றும் அர்ஜுன்..! ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நமச்சி.

அதே மாதிரி இந்த பணத்தை எடுத்துக்கோ எனக் கூற உடனே இல்லன்னா நானே எடுத்துக்கிறேன் என கைய வைக்க கைய தட்டு விட்டு எங்க அப்பா சம்பாதிச்ச காசு என எடுத்துக் கொள்கிறார் முத்து. அந்த ஒரு லட்சம் இவ்வளவு நாள் என்கிட்ட இருந்ததால வட்டி இந்தா ₹5000 எனக் கொடுக்க அந்த காசை வாங்கி சத்தியா முகத்தில் வீசுகிறார். நீ சொன்னிய பிச்சை காசு அது தான் இது இந்த பொறுக்கிக்கோ என கூறுகிறார்.

முத்து பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் சென்று அண்ணாமலையிடம் நீங்க உழைச்ச காசு அம்மா தொலைத்த காசு எனக்கு தெரிஞ்ச போலீசில் சொல்லி வைத்திருந்தேன் அவர்கள் கொடுத்தார்கள் எனக் கூற அந்த காசை அண்ணாமலையிடம் கொடுக்கப் போகும்பொழுது ரோகிணிக்கு சந்தேகம் வருகிறது எப்படி திருடன் முழு பணத்தையும் கொண்டு வந்து கொடுப்பான் அதுக்கு சாத்தியமே இல்லையே எனக் கூறுகிறார்.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

ஸ்ருதியும் எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுல ராபரி நடந்தது ரெண்டு வருஷம் ஆகியும் இன்னும் பணம் கிடைக்கல என பேசுகிறார் பணத்தைப் பற்றி பேசும் போது மனோஜ் குடுகுடுன்னு ஓடி வந்து பணமா எங்க எங்க என கேட்கிறார். எப்படிடா பணம் என்றதும் சிட்டா  பரந்து வர என முத்து அவரைப் பார்த்து கிண்டல் அடிக்க அனைவரும் முத்துவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள் இந்தாங்கப்பா இது உழைத்த காசு அதனால நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க எனக் கொடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரோகினி உள்ளே சென்று பயங்கரமாக யோசிக்கிறார் அப்பொழுது மீனா ஓட்டு கேட்கிறார் இந்த முத்து தான் ஆள் வச்சு பணத்தை அடிச்சிருக்கணும் அப்படி இல்லன்னா அந்த திருடனுக்கு முத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என பேசிக்கொண்டு இருக்கிறார் அப்பொழுது மீனா கேட்டுக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.