டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப் போகும் அதிரடி மாற்றம்..

Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி-யில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது உள்ள சன் டிவி, விஜய் டிவி தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது எந்த தொலைக்காட்சியின் சீரியலை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை வாரந்தோறும் டிஆர்பி லிஸ்ட்டை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது ஆனால் இதில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மறைவிற்குப் பிறகு சொல்லும் அளவிற்கு கதை களம் அமையவில்லை.

என் புருஷன வளச்சி போட்ட நயன்தாரா கன்னத்தில் ஓங்கி அரையனும்… ஆவேசப்பட்ட பிரபலம்..

எனவே விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த தொடரில் அண்ணாமலை, முத்து, மீனா உள்ளிட்ட கேரக்டர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதன்படி இந்த வாரமும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று விஜய் டிவியின் முதல் சீரியல் என்ற பெருமையை சிறகடிக்க ஆசை தொடர் பெற்று உள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மீனா தனது மாமியாரின் வெறுப்புக்கு தொடர்ந்து உள்ளாகிறார். எவ்வளவு நடந்தாலும் தனது குடும்பத்திற்காக இருந்து வரும் மீனா குடும்பத்தை அனுசரித்து வாழ்கிறார்.

வசூல் வேட்டையாடும் ஃபைட் கிளப்.. முதல் நாளில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

எனவே 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இதற்கு மேல் இரவு 7:30 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் நேர மாற்றம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 வாரங்களை கடந்து வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.