மீனாவை கௌரவப்படுத்தி ஸ்ருதி மூஞ்சில் பணத்தை விட்டு எறிந்த முத்து.. பத்ரகாளியாக மாறப் போகும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai Serial Promo : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் சுருதி மீனாவிடம் கொஞ்சம் துணிகளை கொடுத்து இதை துவைச்சிருங்க என்று கொடுக்கிறார் மீனாவும் பரவால்ல குடுங்க நான் வாஷ் பண்ணி தரேன் என்று வாங்கிக் கொள்கிறார் பிறகு நீங்க செய்ற இந்த வேலையை நான் அப்ரிஷியேட் பண்ணாம இருக்க மாட்டேன் என்று ஸ்ருதி ரெண்டாயிரம் பணத்தை கொடுத்து இதை வச்சுக்கோங்க என்று சொல்கிறார்.

மீனாவும் வேற வழி இல்லாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டார்.. பிறகு மீனா முத்துவிடம் அந்த 2000 பணத்தை கொடுத்து ஸ்ருதி அவங்க துணி துவைக்க சொல்லி 2000 பணமும் கொடுத்தாங்க என்று சொல்ல, முத்து உனக்கு இது தேவதான் ரவிக்கு நீ தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்ச இப்ப உன்னையே இந்த லெவல்ல கொண்டு வந்துட்டா என்று சொல்கிறார்.

Vijayakanth VS Kamal : 22 முறை நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்று யார் தெரியுமா.?

  பிறகு மீனா நான் வீட்டு வேலை செய்ய தான் லாய்க்கி, வேற பூ கட்டுறத விட்டா  என்ன எனக்கு தெரியும் அவங்க எல்லாம் பெரிய இடத்து பொண்ணுங்க வேலைக்கு போற பொண்ணுங்க நம்ப அவங்க கிட்ட பதில் பேச முடியுமா என்று சொல்லி ஃபீல் பண்ணுகிறார்.. இதையெல்லாம் நினைத்து முத்து அடுத்த நாள் காலையில் மீனாவுடைய அம்மா தம்பி தங்கச்சி மீனாவுடைய தோழிகள் எல்லோரையும் வீட்டிற்கு வர வைத்துவிட்டு மீனாவையும் ஒரு நல்ல புடவையை கட்டிக்கிட்டு கிளம்பு ஒரு இடத்துக்கு போனோம் என்று சொல்கிறார்.

பிறகு வீட்டில் அப்பா அம்மா ரவி மனோஜ் அவங்க மனைவிகள் எல்லோரையும் முத்து கிளம்ப சொல்லுகிறார்.. இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் முத்து மீனாவிற்காக வீட்டு வாசலில் ஒரு பூக்கடையை ஆரம்பித்து வைத்துள்ளார் அதற்கு விஜயா மலர் அங்காடி என்று பெயர் வைத்துவிட்டு உரிமையாளர் முத்து மீனா என்று குறிப்பிட்டுள்ளார்..

நான் இல்ல.. நான் இல்ல.. வெளியே வந்து கத்திய விஜயகாந்த்! எமோஷனலாக சொன்ன நடிகை கஸ்தூரி

இதைப் பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார் பிறகு அண்ணாமலை மீனாவும் சொந்தமா ஒரு தொழில் பண்ண போறா என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.. முத்துவும் மீனாவை பார்த்து நீ இனிமே ஒரு பூ கடையோட ஓனர் என்று சொல்லுகிறார். பிறகு முத்து அப்பா அம்மா தலைமையில் இந்த வீட்டோட சின்ன மருமகள் ஸ்ருதி தான் இந்த கடையை திறந்து வைக்கணும் என்று சொல்ல சுருதியும் வந்து கடையை திறந்து வைக்கிறார்.

அடுத்து முத்துவும் மீனாவும் அண்ணாமலை விஜயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். பிறகு முத்து ஒரு கவரை ரவியிடம் கொடுத்து இதை உன் பொண்டாட்டியை வாங்கிக்க சொல்லு இதுல 2500 ரூபாய் பணம் இருக்கு என்று கொடுக்கிறார் ஸ்ருதியும் அந்தக் கவரை கோபமாக வாங்கிக் கொண்டு போகிறார் இதையெல்லாம் பார்த்து விஜயாவும் கடுப்பில் இருக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளன..