நான் இல்ல.. நான் இல்ல.. வெளியே வந்து கத்திய விஜயகாந்த்! எமோஷனலாக சொன்ன நடிகை கஸ்தூரி

Vijayakanth : சினிமா அரசியல் என இரண்டிலும் வெற்றியை கண்ட கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார் இவருடைய மறைவிற்கு பிறகும்  அவரைப் பற்றிய பேச்சுக்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி விஜயகாந்த் உடன் இருந்த நினைவுகளைப் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

விஜயகாந்தின் தீவிர ரசிகை நான்.. எங்க முதலாளி படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை நான் சினிமாவில் பார்த்திருக்கிறேன் ஆனால் நிஜத்தில் பார்த்ததில்லை ஆனால் அந்த படத்தின் பொழுது பார்த்தேன் அவர் ஒரு குழந்தை மாதிரி. சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் வெகுலியாகவும் இருப்பார். மேலும் அவர் ஒரு ஜாலியான நபர் அவரிடம் சூட்டிங் ஸ்பாட்டில் உதவிக்காக பல பேர் வந்து கொண்டே இருப்பார்கள்.

2023-ன் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற சன் டிவி பிரபலம்.! மறைந்தும் மக்களின் மனதில் வாழ்வும் நடிகர்..

நாங்க அவருடன் இருக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் அடிக்கடி போட்டிகள் எல்லாம் வைப்பார் ஒரு நாளைக்கு ஷூட்டிங் சீக்கிரமா வராங்களோ அவங்களுக்கு பரிசு என்று சொல்வார் ஒவ்வொரு நாளும் அவர் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரம் வருவார்.

ஒருமுறை காரைக்குடிக்கு ஷூட்டிங் போயிருந்தோம் அது ஒரு பெரிய வீடு அந்த வீட்டில் நைட் ஷுட் நடத்திக்கிட்டு இருக்கும் போது திடீர்னு கரண்ட் கட் ஆயிடுச்சி அப்போ கொஞ்ச நேரத்துல ஒரு சத்தம் கேட்டது அது விஜயகாந்த் சார் தான்.. நான் இல்ல.. நான் இல்ல.. நான் வெளியே வந்துட்டேன் அவர் கத்திக்கிட்டு இருக்காரு..

நீ திருந்தவே மாட்ட.. KPY பாலாவை திட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது!

அப்ப முதலில் யாருக்கும் புரியல அதுக்கப்புறம் தான் புரிந்தது கரண்ட் இல்ல இருட்டா இருக்கும் பொழுது ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அதுக்கு நான் காரணம் இல்லை என்று அவர் வெளியே நின்று கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தார். ஆனா உண்மையில் விஜயகாந்த் சார் செட்டில் அப்படி எந்த ஒரு அசம்பாதமும் நடக்காது அது எல்லோருக்கும் தெரியும்..

ஆனா இவரு விளையாட்டா அப்படி பேசிகிட்டு இருந்தது என்னால் மறக்கவே முடியாது விஜயகாந்த்  சார் பாக்குறதுக்கு தான் கருப்பாக இருப்பார் அவருடைய மனசு வெள்ளை.. அவருடைய கை சிவப்பாக இருக்கும் கொடுத்து கொடுத்து சிவந்து போன கைகள் அது மாதிரி தான் விஜயகாந்த் சார் என சொல்லி கண் கலங்கினார் நடிகை கஸ்தூரி.