நீ திருந்தவே மாட்ட.. KPY பாலாவை திட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது!

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படம் வருகின்ற 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை தொடர்ந்து எஸ் கே 21 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதன் பின்னர் ஏ ஆர். முருகதாஸுடன் படம் பண்ணுகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பல வருடங்களாக சிவகார்த்திகேயன் நடிப்பில் இழப்பறியில் இருந்த அயலான் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது படத்தில் சிவகார்த்திகேயனின் ரகுல் பிரீத் சிங், நிஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, சரவணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

2023-ல் மொக்கை வாங்கிய 5 பான் இந்திய திரைப்படங்கள்.. குழந்தைகளின் கார்ட்டூன் படமாக அமைந்த ஆதி புருஸ்

மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அயலான் படம் வெளிவர இன்னும் சில தினங்களில் இருப்பதால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள கே பி ஒய் பாலா பேட்டி எடுத்தார்.

சென்னையில் வெள்ளம் பாதிப்பின் போது மக்கள் அவதிப்பட்டனர் அப்பொழுது நீயும், அமுதவாணனும் சேர்ந்து இருந்த பணத்தை கொடுத்து உதவி செய்தது  வேற லெவல் என சிவகார்த்திகேயன் பாராட்டினார் மேலும் பேசிய சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் உன்னை நடிக்க அழைத்த பொழுது நீ வரவில்லை. கனா படத்தில் நடிக்க அழைத்த போதும் கூட பாலா நீ வர மறுத்து விட்டாய் என சிவகார்த்திகேயன் கூற KPY பாலா தேங்க்ஸ் அண்ணா, ஐ லவ் யூ அண்ணா என்று பாலா சிறித்து கொண்டே சமாளித்தார்.

சீக்கிரம் யாராச்சும் பட வாய்ப்பு கொடுங்கப்பா.. இதுக்கு மேல போச்சுன்னா மானம் கப்பல் ஏறிடும் .. லாஸ்ட்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்..

மேலும் அயலான் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் பேசாது என்பது போல் யோசித்து என்ன பாலா சொல்ல..  நீ வாயை திறந்தால் மூட மாட்ட உனக்கு எப்படி அந்த செட் ஆகும் செட் ஆகாது என்று சொல்ல..  உடனே பாலா மீண்டும் நன்றி சொன்னார். சிவகார்த்திகேயன் நான் உன்னை பாராட்டவில்லை திட்டுகிறேன் என கூறினார்.