மனோஜ்க்கு தரமான பதிலடி கொடுத்த முத்து.! விஜயாவால் சிக்கலில் மாட்டி கொள்ள போகும் ரோகினி..!

siragadikka aasai serial today episode february 8 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வாங்கி கொடுத்த தாலியை முத்து கையால் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கோவிலுக்கு அழைத்து வருகிறார் புது துணி புது டிரஸ் அனைத்தும் போட்டுக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார்கள்.

அப்பொழுது ஐயிரிடம் முத்து ஆரம்பத்தில் எனக்கு பிடிக்காம தான் தாலி கட்டி விட்டேன் எனக் கூறுகிறார் அதே போல் மீனாவும் எனக்கும் பிடிக்காமல் தான் தாலியை ஏற்றுக் கொண்டேன் ஆனால் இப்பொழுது தான் அவர் மனது எனக்கு புரிந்துள்ளது அதனால் மீண்டும் தாலி கட்டிக் கொள்ள விரும்புகிறேன் என பேசுகிறார்.

உடனே மனசு பிடிச்சு விட்டதுக்கு அப்புறம் தாலி கட்டுகிறீர்கள், நீங்கள் நீண்ட நாள் நல்லா வாழனும் என வாழ்த்துகிறார்கள் மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வருகிறார்கள் வீட்டிற்கு வந்தவுடன் இப்பொழுதுதான் பிடித்த திருமணம் செய்து கொண்டோம் என பேசுகிறார் உடனே அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.

அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

ஸ்ருதி அவர்களிடம் ஆரத்தி கரைத்துக் கொண்டு வா என பேசுகிறார் அப்பொழுது சுருதி அந்த சிகப்பு கலருக்கு சில்லி பவுடர் போடணுமா என கேட்க உடனே விஜயாவை கரைத்துக் கொண்டு வா என அண்ணாமலை கூறுகிறார் விஜயாவும் கரைத்துக் கொண்டு வருகிறார்.

அப்பொழுது முத்துவுக்கு ரவி வாழ்த்து கூறுகிறார் அதே போல் மீனாவுக்கும் வாழ்த்து கூறுகிறார் அந்த சமயத்தில் மனோஜ் இப்ப ஏற்கனவே தான் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்ப என்ன மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இதுக்கு எதுக்கு நீ வாழ்த்து கூறியிட்டு இருக்க என ரவியை பார்த்து பேசுகிறார்.

உடனே முத்து எப்படி நீ இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு கூட சுத்துனியே அது மாதிரியா என மூஞ்சில் அடித்தது போல் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உன்ன மாதிரி நான் விட்டுட்டு போகல கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரையும் காப்பாத்துறேன் என பேசுகிறார்.

மேலும் மனோஜ் ஏதாவது கூற நான் உன்னை மாதிரி வேலை இல்லாம பொய் சொல்லல நேர்மையாக நடந்துக்கிறேன் இன்னும் அவருக்கு மூஞ்சில் கறியை பூசுவது போல் பேசுகிறார் இதனால் ரோகிணி மனோஜை வாய மூடுங்க என பேசுகிறார்.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

அடுத்ததாக அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்கள் உடனே விஜயா ரோகினி இடம் அரை பவுன் வாங்கி கொடுத்ததற்கு இந்த அலப்பறை பண்ற உங்க அப்பா கிட்ட சொல்லி நிறைய வாங்கிட்டு வர சொல்லு என பேசுகிறார் உடனே எங்க சுத்தினாலும் இவங்க என்கிட்டயே வந்து நிற்கிறார்களே என மண்டையை பிடித்துக் கொள்கிறார்.

அடுத்த காட்சியில் மீனா சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது விஜயா புது பொண்ணுன்னு நினைப்பா சீக்கிரம் சமையல் பண்ணு என திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..