ரோகிணியின் குட்டு வெடித்தது ஜெயிலுக்குப் போகும் மனோஜ்..! மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் இருவரை அழைத்துக் கொண்டு வந்து கட்சி ஆபீஸ்ல் இறக்கி விடுகிறார் அப்பொழுது அவருடைய நண்பர் அங்கே நிற்கிறார் இதுதான் என்னுடைய கட்சி ஆபீஸ் என முத்துவிடம் அவரின்  நண்பர் கூறுகிறார் உடனே இருவரும் பேசிக் கொண்டிருக்க கார் என்ன ஆனது என கேட்கிறார் அதற்கு அது போயிடுச்சு என பேசிக்கொண்டு இருக்க உடனே நம்ம கட்சியில் இணைந்து விடு என சொல்ல ஏன் ஆட்டோ ஓட்டுவது கூட உனக்கு பிடிக்கலையா என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தெரிந்த வேலையை விட்டவனும் கெட்டான் தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான் என பழமொழி சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே நமது கட்சி ஆபீஸில் 250 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க தலைவர் முடிவு செய்துள்ளார் அதனால் அதற்கான வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது என பேசுகிறார் அடுத்த காட்சியில் வா தலைவரிடம் இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன் என பேசி அழைத்து செல்கிறார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

உடனே 250 ஜோடிகளுக்கு திருமணம் நடந்து விடும் தானே அதில் எந்த ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது என தலைவர் முத்துவின் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு சின்ன சிக்கலாகிவிட்டது என பேசுகிறார் என்ன என கேட்க 500 மாலை ரெடி பண்ண சொன்னவன் ஓடி விட்டான் அதனால் மாலை மட்டும் எப்படி கிடைக்கும் என பேச தலைவர் கோபப்பட்டு முத்துவின் நண்பரை அடிக்கிறார் உடனே அதெல்லாம் முடியாது சீக்கிரம் ரெடி பண்ணு என பேசுகிறார்.

உடனே முத்துவிடம் உன்னுடைய ஒய்ப் பூ கட்டுறவங்க தானே மாலை கட்டுவாங்கல்ல மாலை ரெடி பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் என பேச முத்துவிடம் தலைவர் 500 மாலை கட்டி கொடுக்க முடியுமா எனக் கேட்க முத்வும் தலையாட்டுகிறார் உடனே 20000 ரூபாய் அட்வான்ஸ் பணத்தை எடுத்து நீட்டுகிறார். மற்றும் வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்கிறார் வீட்டுக்கு சென்று அண்ணாமலை இடம் சந்தோசமான செய்தியை கூற மீனாவை கூப்பிடுங்கள் என கூறுகிறார்.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

மீனா வந்ததும் ஜாட மடையாக அண்ணாமலை இடம் சொல்வது போல் மாலைக்கு அட்வான்ஸ் வாங்கி வந்ததை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் 500 மாலை என்ற உடன் மீனா விளையாட வேண்டிய இடம் இது இல்லை என பேசுகிறார் பிறகு இந்த அட்வான்ஸ் என பேச இருவரும் மாறி மாறி பேசி கொள்கிறார்கள். வண்டி வாடகை 300 ரூபாய் என பேசிக் கொண்டிருக்க உடனே அதை நானே பார்த்துக்கொள்கிறேன் 250 ரூபாய் கொடுத்தா போதும் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் ரோகினி மனோஜ் இருவரும் நடந்து கொண்டு வரும் பொழுது எனக்கு தான் வேலை கிடைச்சிடுச்சு 14 லட்சம் ரெடி பண்ணினால் போதும் என பேச உடனே ரோகிணி திரும்பி பார்த்து முறைக்கிறார் அது மட்டும் இல்லாமல் நீ இங்கே ஒரு ஜாப் பாரு நானும் பார்லர் இங்கதான் நான் வச்சிருக்கேன் என பேச நீயும் அங்கு வந்துவிடு என மனோஜ் கூறுகிறார். முதல்ல ஆறு மாசம் இங்கேயே ஒரு கம்பெனியில் நிரந்தரமா இரு அப்புறம் அத பத்தி யோசிக்கலாம் என பேசுகிறார்.

ரோகிணிக்கே தெரியாமல் மனோஜ் வாங்கிய கடன் வீட்டிற்கு வந்து மிரட்டும் நபர்.! சிட்டியை செருப்பால் அடிப்பேன் என்னை மிரட்டிய மீனா…

அந்த சமயத்தில் பேங்காரர்கள் இருவர் வருகிறார்கள் அப்பொழுது ரோகிணியை பார்த்து வண்டியை நிறுத்தி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் மூன்று லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆக பார்க்கிறியா அப்படி எல்லாம் உன்னை விட முடியாது நீயே ஒரு பிராடு என திட்டி கொண்டு இருக்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க கண்டிப்பா நான் கொடுத்து விடுகிறேன் என்று பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் உன்னுடைய ஆதார் கார்டு எடு என கேட்க ஆதார் கார்டை எடுத்து கையில் வைத்தபடி போஸ் கொடுக்கிறார் உடனே அதனை போட்டோ எடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் மனோஜ் ஆதர் கார்டை கேட்டு அவரையும் போட்டோ எடுத்துக் கொண்டு நீ பணம் தரவில்லை என்றால் மனோஜை தூக்கி ஜெயிலில் வைத்து விடுவோம் என மிரட்டி விட்டு செல்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் மனோஜ் 20000 பணம் வாங்கியதற்கு டீசண்டா வீட்ல வந்து கேட்டான் அதுக்கு நீ அந்த சீன் போட்ட ஆனால் மூன்று லட்சம் வாங்கிட்டு ஏமாத்த பாத்து இருக்கியா. இதை என்னையும் ஏமாற்ற பார்க்கிறாயா? என்கிட்ட ஏன் சொல்லல என கேட்கிறார்.

கிடைச்ச ஹீரோயின் வாய்ப்பை தவறவிட்டுவிட்டு புலம்பி தள்ளும் சீரியல் நடிகை..

உடனே ரோகினி உன்ன மாதிரியே அப்பாவோட பென்ஷன் பணம்  27 லட்சத்தை எடுத்து கிட்டு வேற எவளுகிட்டயோ கொடுக்கல நான் வித்யாவுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல அதனால லோன் வாங்கினோம் என பேசுகிறார். இதனால் மனோஜ் வருத்தப்படுகிறார் முத்து தான் இப்படி பேசுவான் இப்ப நீயும் பேச ஆரம்பிச்சிட்டியா என கோபத்துடன் செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.