கிடைச்ச ஹீரோயின் வாய்ப்பை தவறவிட்டுவிட்டு புலம்பி தள்ளும் சீரியல் நடிகை..

Mirna Menon Replaced Chaitra Reddy: சீரியல் நடிக்கும் பலருக்கும் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துதான் வருகிறது. அப்படி ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து வருகின்றனர். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் சில பேர் சில காரணங்களால் அந்த வாய்ப்புகளை கை நழுவி பிறகு புலம்பி வருகிறார்கள். அப்படிதான் கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் அந்த வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டார் என்று சொல்லலாம். விஜய் டிவியின் கல்யாண முதல் காதல் வரை என்ற நாடகத்தில் தொடங்கி ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நெகடிவ் கேரக்டர்களின் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சைத்ரா ரெட்டி.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

இதனை அடுத்து சன் டிவியில் வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயல் என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஒரு ஆபீசர் கேரக்டரில் நடித்திருந்தார் ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை அதன் பிறகு கடந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ரஜினியின் மருமகளாக மிருணால் நடித்திருந்தார் இப்படத்தில் இவருடைய கேரக்டருக்கு சொல்லும் அளவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் இவருடைய அழகினால் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களால் ஜெயிலர் ஹீரோயின் இவர்தான் என செல்லமாக அழைக்கும் அளவிற்கு தனது அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை தடுக்க கோபி செய்த சதி!! சூழ்ச்சியிலிருந்து வெல்வாரா பாக்யா.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி…

ஆனால் இந்த வாய்ப்பு இவருக்கு முன்னதாக சைத்ரா ரெட்டிக்கு தான் கிடைத்திருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்த நிலையில் ஆனால் ஒரு சில காரணங்களால் சைத்ரா ரெட்டி இதிலிருந்து விலகி விட்டாராம் அதனால் இப்படத்தில் நடித்த மிர்னா மேனனிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சைத்ரா ரெட்டி புலம்பி வருகிறாராம்.