ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் சரஸ்வதியை பார்த்துவிட்டு டாக்டர் சரஸ்வதி மன அழுத்தத்தில் இருக்குறதால குழந்தையோட வளர்ச்சி கம்மியா இருக்கு என சொல்கிறார்.  அதற்காக மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்துவிட்டு மைண்டை கொஞ்சம் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறுகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் சரஸ்வதியை ரொம்ப கேர் ஃபுல்லா பார்த்துக்க சொல்லி தமிழிடம் டாக்டர் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும்  நடந்த அனைத்தையும்  குடும்பத்தாரிடம் தமிழ் சொல்கிறார். அப்பொழுது அங்கு ராகினி வருகிறாள். ராகினி வந்து சரஸ்வதியின் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு நல்லா சாப்பிடுங்க உடம்ப பாத்துக்கோங்க மைண்ட் ரிலாக்ஸா வச்சுக்கோங்க என கூறுகிறார்.

உடனே ராகினியின் அப்பா, கார்த்தி மற்றும் அனைவரும் இது எல்லாத்துக்கும் காரணம் ஒன் புருஷன் தான் என கூறுகின்றனர். அதற்கு ராகினி எது நடந்தாலும் அவரை சொல்லுங்க என கோபப்படுகிறார் அதற்கு கோதை விடுங்க அவ என்ன செய்வா என சொல்கிறாள்.

பின்னர் வீட்டுக்கு சென்றதும் அர்ஜுன்  குழந்தைய விட்டுட்டு எங்க போன குழந்தை ரொம்ப நேரமா அழுதுகிட்டு இருக்கு என திட்டுகிறார். அதற்கு ராகினி நான் தமிழ் அண்ணன் வீட்டுக்கு போனான் சரஸ்வதி அண்ணி ஜெயில்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க போல அதனால குழந்தை ரொம்ப பாதிக்கப்பட்டு  இருக்கு என டாக்டர் சொல்லி இருக்காங்க என சொல்கிறார்

இதைக் கேட்ட  அர்ஜுன் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் சந்தோஷப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல்  ராகினி நான் வேலைக்கு போகணும்னு சொன்னேன்ல அதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க என கேட்கிறாள். அதற்கு அர்ஜுன் நீ வேலைக்கு போக வேண்டாம் இங்கேயே இரு குழந்தைய பார்த்துக்கோ என சொல்கிறார்.

குழந்தை அழுததும் ராகினி குழந்தையை தூக்கிக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார். அப்பொழுது அர்ஜுன் அம்மா ஏண்டா அவ ஆசைப்படுகிற  வேலைக்கு போனா போறாளே என கூறுகிறாள் அதற்கு அர்ஜுன் வேலைக்கு போனா அவளுக்கு  நிறைய விஷயம் தெரிய வரும் அப்புறம் நிறைய பேசுவா சொத்து நம்மள விட்டு போயிடும் என கூறுகிறார்.

அவை இங்கே இருந்தால் தான் என்ன பத்தியும் என் புள்ளைய பத்தியும் மட்டும் நினைப்பா, வெளியே போனா மத்த விஷயங்கள் தெரிஞ்சு அவ மொத்தமா மாறிடுவா என சொல்கிறார். அவ இங்கதான் இருக்கணும் என சொல்லிட்டு சீக்கிரம் அவ கிட்ட இருந்து சொத்தை எழுதி வாங்கணும் என முடிவு பண்ணுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.