தன்னுடைய அம்மா உயிருடன் இருப்பதை உளறிய ரோகிணி.! கறி கடை பாயால நீ மாட்ட மாட்ட உன் வாயாலயே நீ மாட்டிப்ப..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் பொங்கல் பண்டிகையை கொண்டாட அண்ணாமலை தன்னுடைய குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வருகிறார் அப்பொழுது பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அங்கு வந்த அனைவரையும் பாட்டி தான் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அதனால் மீனா எப்பொழுதும் வேலை செய்வதால் அவரை எந்த வேலையும் செய்யக்கூடாது மேம்பார்வை மட்டுமே பார்க்க வேண்டும் என கூறி விடுகிறார் ஆனால் விஜயா மற்றும்  ரோகினி மற்றும் ஸ்ருதி இருவரையும் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்த பாண்டியனின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா…!

இப்படி சென்று கொண்டிருக்கிறது சீரியல், இந்த சமயத்தில் ரோகினியின் மாமா மலேசியாவில் இருந்து வந்துள்ளதாக கறிக்கடை பாய் வந்துள்ளார். அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

லேசாக முத்துவிற்கு சந்தேகம் வருகிறது இதனை உறுதி செய்யும் விதமாக அவருக்கு தண்ணியை வாங்கி போட்டு உண்மையை வாங்க வேண்டும் என முடிவில் இருக்கிறார். அதேபோல் மலேசியாவில் இருந்து வந்தவர் போல் இவர் பேசவில்லை அது மட்டும் இல்லாமல் காய்கறி வெட்டும் இடத்தில் கரி கொத்து  போடுவது போல் கொத்தி கொத்தி வெட்டுவதால் அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது.

ஜஸ்ட் மிஸ் ஹாலிவுட் பட வாய்ப்பை தவறவிட்ட சமந்தா.? அந்த படத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.?

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியது அந்த வீடியோவில் பிரவுன் மணி அதாவது மலேசியா மாமா ரோகிணியின் அம்மா அப்பா இறந்ததுதான் மிகவும் கவலை என பேச உடனே உணர்ச்சிவசப்பட்டு யாருடைய அம்மா இறந்துட்டாங்க என் அம்மா இன்னும் இறக்கவில்லை என கத்துகிறார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள் இத்துடன் ப்ரோமோ வீடியோவை முடிக்கிறார்கள் நாளை தான் தெரியும் என்ன நடந்தது என்பது,.