ஒரு வழியாக குடித்துவிட்டு ரகளை செய்யப் போகும் முத்து.. பிச்சைக்காரர்கள் என்பது போல் அண்ணாமலையை அசிங்கம் படுத்தும் ஸ்ருதியின் அப்பா.. ரோகிணி மீது செம கடுப்பில் விஜயா..

siragadikka aasai march 29 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் தோழி வித்தியா ரூமில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அங்கு எல்லோரும் உங்க அப்பா எப்ப வருவார் என்று எதிர்பார்த்துட்டு இருக்காங்க உங்க அப்பா லேட்டாக வருவதால் ஸ்ருதிக்கு முதலில் சடங்கு செய்கிறார்கள் என பேசுகிறார். பரவால்ல இருக்கட்டும் என பேசிக் கொண்டிருக்கும்பொழுதே மனோஜ் உள்ளே வந்து உங்க அப்பா எப்ப தான் வருவாரு வருவாரா மாட்டாரா என்கிட்டயாவது உண்மைய சொல்லு என பேசுகிறார்.

பிளைட் டீடெயில்ஸ் சொல்லு நான் போன் பண்ணி கேட்கிறேன் டோல் ஃப்ரீ நம்பருக்கு என டோல் ஃப்ரீ நம்பருக்கு போன் பண்ணுகிறார் ஆனால் போன யாரும் அட்டென்ட் பண்ணவில்லை இந்த நிலையில் அடுத்ததாக விஜயா வெளியே நின்று கொண்டிருக்கும் பொழுது சம்மந்தி உள்ளே வந்து ரோகினி கிளம்பிட்டாளா வாங்க சடங்கு செய்யலாம் என பேச அதற்கு இவ்வளவு செலவு பண்ணி நீங்க ரெடி பண்ணி இருக்கீங்க அதனால ஸ்ருதிக்கு முதலில் சடங்கு செய்து விடலாம் என பேசுகிறார்.

பாக்கியா செய்த செயல் அதிர்ச்சியில் உறைந்த மொத்த குடும்பம்..!! வியந்து பார்க்கும் கோபி, ராதிகா.! பாக்கியலட்சுமி புதிய ப்ரோமோ..

இந்த பொம்பளை இப்படி பேசக்கூடிய ஆளே கிடையாது இன்னைக்கு ஏதோ எனக்கு விட்டுக் கொடுத்த மாதிரி பேசுறாளே என ரோகிணியிடம் விஜயா விசாரிக்கிறார் அப்பொழுது ரோகிணி அப்பா வர டைம் ஆகிறது அதனால் தான் இப்படி சொல்லி இருப்பாங்க என பேசுகிறார் உடனே சுதா அந்த பொம்பள என்னமோ எனக்கு விட்டுக் கொடுத்த மாதிரி பேசுறா இதுதான் உண்மையா என மனசுக்குள் பேசிக் கொள்கிறார்.

மற்றொரு பக்கம் சுருதி அழைத்து வந்து அனைத்து சம்பிரதாயங்களும் செய்கிறார்கள் அதேபோல் மீனாவும் ரோகிணியும் சம்பிரதங்களை செய்து விட்டு அடுத்ததாக ரோகினியை கிளம்பி விட்டு வர சொல்கிறார்கள் அப்பொழுது ரோகினி அங்கிருந்து வருகிறார் உங்க அப்பா இன்னும் வரலையா என விஜயா ரோகினி இடம் கேட்க போனை எடுக்கலை என பேசுகிறார் இதனால் விஜயா கடுப்பாகி என்னையே ஏமாற்ற பார்க்கிறாயா? என பேசிவிட்டு சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் மேகனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! அழகிய ஜோடி கண்ணு பட்டுடும் சுத்தி போடுங்க..

இந்த நிலையில் அண்ணாமலை கீழே உட்கார்ந்து கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பாவிடம் ஒருவர் உங்களுக்கு பெரிய மனசு நீங்க ஏற்பாடு பண்ணிய ஃபங்ஷனில் அவங்க மூத்த மருமகளுக்கும் பங்க்ஷன் பண்ணுகிறீர்கள் என பேச இதுல என்ன இருக்கு இப்ப நிறைய சமைச்சாச்சின்ன  நாம சாப்பிட்டு மிச்சத்தை யார்கிட்டயாவது குடுக்குறோம்ல அது மாதிரி தான் என அசிங்கப்படுத்திவிட்டு செல்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முத்துவை பால்பாண்டி குடிக்க வைப்பதற்காக எவ்வளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு வழியாக முத்துவை அழைத்து காருக்கு பின்னாடி சென்று பார் செட்டப்பை காட்டுகிறார் உடனே முத்து பிரமிப்பாக பார்க்கிறார் பால்பாண்டி இரண்டு கிளாஸ் ஊற்றி முத்துவிடம் கொடுக்கிறார் முதலில் மறுத்த முத்து பிறகு கிளாசை வாங்கிக் கொண்டு பூமிக்கு இரண்டு சொட்டு விடுகிறார். முத்து குடித்துவிட்டு ரகளை செய்வாரா? மாட்டாரா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.