பாக்கியா செய்த செயல் அதிர்ச்சியில் உறைந்த மொத்த குடும்பம்..!! வியந்து பார்க்கும் கோபி, ராதிகா.! பாக்கியலட்சுமி புதிய ப்ரோமோ..

பாக்கியலட்சுமி இன்றைய  எபிசோடில்  பாக்யா மற்றும் மரியம் இருவரும் சேர்ந்து செழியன், ஜெனியை சந்திக்க வைத்து பேச வைக்கின்றனர்.  அப்படி இருவரும் மாறி மாறி பேசி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டு இருவரும் கட்டிப்பிடித்து நிற்கின்றனர். அதைப் பார்த்த பாக்யா மற்றும் மரியம் சந்தோஷப்படுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரோமோவில் பாக்யா மற்றும் எழில் வீட்டுக்கு வருகின்றனர். அவர்களைப் பார்த்து பாட்டி எங்கடா செழியன் அவனை என்னடா பண்ணுனீங்க என கேள்வி கேட்கிறார். பதில் எதுவும் சொல்லாமல் பாக்யா ஆரத்தி கலந்து எடுத்துக்கிட்டு வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் மேகனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! அழகிய ஜோடி கண்ணு பட்டுடும் சுத்தி போடுங்க..

ஈஸ்வரி போடும் சத்தம் கேட்டு கோபி மற்றும் ராதிகா மாடியில் இருந்து கீழே இறங்கி வருகின்றனர் என்னமா ஆரத்தி எல்லாம் கையில வச்சிருக்க என தாத்தா பாக்கியாவிடம்  கேட்கிறார். உடனே எழில் எல்லாம் வெளிய வந்து பாருங்க தாத்தா என சொல்லிவிட்டு வெளியே செல்கின்றார். அப்போது பாக்யா செழியனிடம் அவங்கள வர சொல்லுடா என சொல்கிறார்.

ஜெனி குழந்தையோடு காரில் இருந்து இறங்கி வந்து செழியன் பக்கத்தில் நிற்பதை பார்த்து தாத்தா என்ன ஜெனி வந்துட்டாளா  என கேட்கிறார். பாக்கியா, எழில், செழியன், ஜெனி என அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி, கோபி, ராதிகா என அனைவரும் அதிர்ச்சியாக செழியன் ஜெனி மற்றும் பாக்யாவை  பார்த்தபடியே நிற்கின்றனர். அத்துடன் இந்த பிரம்மோ முடிவடைகிறது.

போதையில் மகாவால் திருடி போலீசில் சிக்கிய சூர்யா!! ஆஹா கல்யாணம்.

இந்த எபிசோடு நாளை பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்வரி மற்றும் கோபி மூஞ்சில் பாக்கியா  கரியை பூசியது போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.