முத்துவுக்கு சப்போர்ட் பண்ணி விஜயாவை எதிர்த்து பேசிய மீனா.! மனோஜால் ரோகிணி எடுத்த முடிவு..

siragadikka aasai January 10 : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மனோச் செய்த வேலையை நினைத்து அழுது கொண்டே தன்னுடைய தோழி வீட்டிற்கு செல்கிறார் அங்கு அவருடைய தோழி பரவால்ல விடு நீ செஞ்ச தவறு மனோஜ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா அதனால கொஞ்சம் ஈஸியா எடுத்துக்கோ என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் அதற்கு ரோகிணி அந்த முத்து முன்னாடி நான் எவ்வளவு கேவலப்பட்ட நின்னு தெரியுமா என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் டீ போட்டு எடுத்துக் கொண்டு வரவா என கேட்க வா என கூறி விடுகிறார் டீ போடும் அந்த கேப்பில் ரோகினி வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார் உடனே ரோகினி தோழி மனோஜ்க்கு போன் செய்து ரோகிணி அங்கே வந்தாளா என கேட்கிறார் இங்கே வரவில்லை எனக் கூற இங்கே வந்து நடந்த கதையை சொல்லிவிட்டு அழுதா ஆனால் நான் திரும்பி வந்து பார்க்கிறேன் காணும் என கூறுகிறார்.

700 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.. என் மனதை கவர்ந்த கதாபாத்திரம் இதுதான் – நாசர்

உடனே முத்துவை சட்டையை பிடித்து உன்னால் தான் என் மனைவி ஓடி விட்டால் என பேச அனைவரும் முத்துமீது பழியை போடுகிறார்கள் நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட தனியா சொல்லி இருக்கலாம் என முத்துவின் அப்பாவும் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் முத்துவின் தம்பியும் எந்த நேரத்துல ஏதோ பேசணும்னு தெரியாம பேசிட்டாங்க இப்ப அதுவா பிரச்சனை வாங்க போய் தேடலாம் என பேசுகிறார்கள்.

அதற்குள் முத்துவின் அம்மா உன்னால தான் எல்லா பிரச்சனையும் எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி ஏதாவது பண்ணி விடுற அதுக்காக தான் உங்க ரெண்டு பேரையும் என வார்த்தையை விடுவதற்குள் முத்து என்ன சொல்ல வரீங்க என கேட்கிறார் அப்பொழுது மீனா இதுக்கு முன்னாடி அவர் ஒரு வாரம் வேலை இல்லாமல் இருந்த பொழுது  இப்படி தானே மனோஜ் அசிங்கப்படுத்தினார் அப்ப மட்டும் யாரும் கேட்கலையே என விஜயாவை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

அஜித்தின் உண்மை முகம் வெளிவந்தது.. ரசிகர்களுக்கு அட்வைஸ்

மனோஜின் அப்பா நீ போய் கூட்டி கொண்டு வா ரோகிணியை காலில் விழுந்தாவது நீ செஞ்ச தப்பா மன்னிக்க சொல்லி கூட்டிட்டு வா என பேசுகிறார் மனோஜிடம் அது மட்டும் இல்லாமல் கூடவே முத்துவையும் அனுப்புகிறார்கள் ஆனால் முத்து காரில் போவதற்கு முன்பே மனோஜை கிண்டல் அடித்துக் கொண்டே செல்கிறார். அதுமட்டுமில்லாமல் ரோகிணி குமாரபாளையம் அருகில் இருப்பதாக அவருடைய பார்லர் வேலை செய்யும் பெண்  சொல்வதால் உடனே குமாரபாளையத்திற்கு செல்ல முடிவு செய்து இருக்கிறார்கள்.

அதற்குள் குமாரபாளையத்திற்கு எதற்காக ரோகினி செல்ல வேண்டும் அவர்கள் அம்மா வீட்டுக்கு தானே போகணும் என முத்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் மீனாவிடம் அப்பொழுது மனோஜை பார்த்து ஒருவேளை வக்கீலை பார்க்க சென்றிருக்கலாம் என கூற மனோஜின் முகம் வாடுகிறது இப்படியே கிண்டல் செய்து கொண்டே செல்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.