முத்துவின் பிளானை சுக்குநூறாக உடைத்த மலேசியா மாமா.! அடச்ச சரக்கு போச்சே.. வசமாக சிக்கிக் கொண்ட மனோஜ்..

siragadikka aasai january 27 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மலேசிய மாமாவை அழைத்துக் கொண்டு ஆத்தங்கரை பக்கம் போகிறார்கள் அப்பொழுது முத்துவின்  நண்பன் முத்துவிடம் கேளு என கூற உடனே முத்துவும் மலேசியா மாமாவிடம் ஃபாரின் சரக்கு பற்றி கேட்கிறார், உடனே மலேசியா மாமா ஐந்து ஃபுல் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். ஒன்னு உங்களுக்கு இன்னும் ரெண்டு மாப்பிள்ளைக்கு உங்க அப்பாவுக்கு எனக் கூற அப்பா அதெல்லாம் அடிக்க மாட்டார் என முத்து சண்டைக்கு போகிறார்.

சரக்கு என்ன ஆச்சு எனக் கேட்க ஐந்து ஃபுல் வாங்கிக் கொண்டு வந்ததால் கஷ்டம் பொருள் என பிடித்து  விட்டார்கள் என கூறுகிறார். உங்களுக்கு எப்படி ஃபாரின் சரக்கு அவசியமோ எனக்கு நம்ம நாட்டு சரக்கு தான் முக்கியம் ஃபாரின் சரக்கு அடிச்சு அடிச்சு நாக்கு செத்து போச்சு என மலேசியா மாமா கூறுகிறார். உடனே முத்து தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி சரக்கு வாங்கிக் கொண்டு வர சொல்கிறார்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத நடிகை இவர்தான்.? உருட்டு பயில்வான் சொன்ன அந்த நடிகை யார் தெரியுமா.?

இதெல்லாம் வேண்டாம் என மனோஜ் கூறியும் உடனே மலேசியா மாமா விருந்தாளியை விருந்தோம்பலாக கவனிக்கிறார்கள் அதனை பெருமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல் தத்துவம் பேசி குடிக்க ஆயத்தம் ஆகிறார். உடனே குடிப்பதற்கு முன்பு பூமாதேவி இடம் கொடுக்க வேண்டும் என நாலு சொட்டை எடுத்து தரையில் தளிக்க அனைவரும் அவரையே அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.

பிறகு மலேசியா மாமா குடிக்க ஆரம்பிக்கிறார் தண்ணிய ஊற்றாமல் குடித்துக் கொண்டிருக்கிறார் மலேசியா மாமா இதனால் முத்து இன்னொரு ரவுண்டு ஊத்து அப்பதான் உள்ளே இருக்கிறது எல்லாம் வெளில வரும் எனக் கூற இப்படியே குடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் முத்துவின் நண்பர்கள் இருவர் வரும் பொழுது அவர்களிடம் வம்பு இழுக்கிறார் உடனே ஓவரா குடிச்சிட்டாரு நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என முத்து கூறி விடுகிறார்.

கையில் கட்டு போட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பேசும் சூரி.! கருடன் பட வீடியோ இதோ..

ஆனால் மலேசியா மாமா அடுத்ததாக மனோஜை அழைத்து உட்கார வைத்து அவர் வாயில் சரக்கை ஊற்றி விடுகிறார் அது மட்டும் இல்லாமல் இரண்டாவது ரவுண்டும் ஊற்றி விடுகிறார் இதனால் மனோஜ் பித்து பிடித்தது போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். முத்து இதுக்கும் என்னதான் திட்டுவாங்க ஒழுங்கா உன் வாயில நீங்க தான் சரக்கை ஊத்தணும்னு ஒத்துக்கோங்க என பேசுகிறார்.

பிறகு மனோஜ் எழுந்து நான் வீட்டுக்கு போறேன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறார். அதேபோல் மலேசியா மாமாவிடம் முத்து நீங்க யார் என கேட்க நான் யார் தெரியுமா நான் யார் தெரியுமா என அவரும் மயங்குகிறார். நான் மலேசியாவில் இருந்து வருகிறேன் என கூறி உளறிக் கொண்டே வருகிறார் அந்த சமயத்தில் மனோஜ்  ஒரு கட்டையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.

செவிக்கு விருந்து கொடுத்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா.!

எப்ப பாரு ரூம் வேணும் ரூம் வேணும்னு கேட்பான் இப்ப ரூம் இல்லாமல் கட்டையில் படுத்து இருக்கான் என முத்து பேசுகிறார் பிறகு இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள் மனோஜை நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார் அந்த சமயத்தில் விஜயா மற்றும் ரோகிணி வருகிறார் என்ன ஆச்சு மனோஜ் ஏன் இப்படி பாக்குற வெறிக்க வெறிக்க என கேட்கிறார்.

அதேபோல் ரோகினையும் என்னாச்சு மனோஜ் என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது மனோஜ் குடித்ததால்தான் இப்படி ஆகிவிட்டது இதற்கு காரணம் முத்து தான் என குடும்பமே முத்துவைத் திட்ட இருக்கிறது இனி வர எபிசோடில் இதனை காணலாம்.