ரத்த பொரியல் மட்டன் சுக்கா என உளறி கொட்டிய கறிக்கடை பாய்.! வசமாக சிக்கிய ரோகிணி.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் ஏதோ உளறி கொட்டி கொண்டிருந்த ரோகினியின் மாமா. உடனே ரோகிணி நீங்க சுடு தண்ணி கேட்டிங்களே வாங்க தருகிறேன் என ரூமுக்கு அழைத்து சென்று ஓவர் ஆக்டிங் போட்டு மாட்டி விட்றாதீங்க அப்புறம் அவ்வளவுதான் எனத் திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் ஆங்காங்கே கேமரா இருக்கிறது தேவையில்லாம ஏதாவது உளறி விட்டுறாதீங்க என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து மற்றும் முத்துவின் நண்பனுக்கு மிகப்பெரிய சந்தேகம் வந்துவிட்டது இவன் பேசுறதெல்லாம் பார்த்தா கண்டிப்பாக ரோகிணியின் மாமா போல் தெரியவில்லை ஏதோ சென்னையில பர்மா பஜாரில் இருந்து வந்த மாதிரி தெரியுது அது மட்டும் இல்லாமல் அவன் காய் நறுக்குற ஸ்டைல பாத்தியா கொத்துக்கறி போடுற மாதிரி கொத்தி வச்சிருக்கான்.

சாய் பல்லவியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் புகைப்படங்கள்.

அதே மாதிரி பேச்சும் சரியில்ல எல்லாமே சென்னை ஸ்லாங்கா இருக்கு அதனால் இவனை நம்ப கண்டுபிடிக்கணும் என பேச மலேசியா சரக்கு அவன் கிட்ட இருக்கு அதனால அமைதியாக இரு அதை வாங்கிடுவோம் பஸ்ட் என முத்துவின் நண்பன் கூறுகிறார்.

அவன் எப்படியாவது தனியா அழைத்துக்கொண்டு வந்து தான் உண்மையை வாங்கணும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்த காட்சியில் பொங்கல் வைப்பதற்கு கோலம் போட்டுள்ளார்கள் அதனை பார்த்து பிரம்மச்சு சுருதி வாவ் எனக் கூறுகிறார் இந்த கோலம் யார் போட்டது என கேட்க மீனாதான் போட்டது என பாட்டி கூறுகிறார்.

உடனே விஜயா என்னத்த சாதிச்சிட்டா கோலம் தானே போட்டுவிட்டார் உடனே வாழ்த்துறீங்க என கேவலமாக பேசுகிறார் உடனே பாட்டி விஜயாவை வாழ்த்த முடியலனாலும் எதுவும் பேசாத என திட்டுகிறார்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா.! அப்போ ரஜினி, கமல் எல்லாம் கிடையாதா..?

அடுத்த காட்சியில் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கும்பொழுது ரோகிணி கண்ணில் புகை அடித்து விடுகிறது அதனால் ஓவர் ஆக்டிங் ரவி செய்ய உடனே மீனாவை அடுப்பை ஊத சொல்கிறார்கள் உடனே பற்றிக்கொள்கிறது பார்த்தீர்களா என பாட்டி கூறுகிறார் மேலும் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சர்க்கரைப் பொங்கலை பாட்டி அனைத்து பேதிகளுக்கும் ஊட்டி விடுகிறார்  இப்படி சந்தோஷமாய் இருக்கிற நேரத்துல ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என பாட்டி கூறுகிறார்.

உடனே அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டோ எடுக்க உக்காருகிறார்கள் அப்பொழுது ஹார்ட்டின் சிம்பல் போட்டு அனைவரையும் கனெக்ட் செய்கிறார் சுருதி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.