தமிழ் சினிமாவில் முதன்முறையாக 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா.! அப்போ ரஜினி, கமல் எல்லாம் கிடையாதா..?

Tamil cinema : தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யார் என்றால் நடிகர் ராஜ்கிரன் தான் இதனை சமீபத்தில் ஒரு பேட்டி மூலம் உறுதி செய்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் கூட ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் இவர்களெல்லாம் 25 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் இருப்பினும் இவர்களை அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் ராஜ்கிரன் தான்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை ஏனெனில் நான் 16 வயசுல சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ.4 ரூபாய் 50 பைசா அந்த சமயத்தில் நான் தினக்கூலியாக தான் இருந்தேன் இதனை அடுத்து என்னுடைய உழைப்பையும் நேர்மையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி கிடைத்தது.

அழகில் அம்மாவை மிஞ்சிய ரம்பாவின் மகள்.! தாவணி புடவையில் என்னமா இருக்கிறார் பார்த்தீர்களா.?

அதன் பிறகு தான் எனக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம் அது அப்படியே படிப்படியாக 170 ஆக உயர்ந்தது அந்த ஒரே ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் அதன் பிறகு தான் சொந்தமாக வினியோக கம்பெனியை ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்து வந்தேன் அதேபோல் அதன் பிறகு நானே படத்தை இயக்கி நடித்தேன் அந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி பிரபலமடைந்தது.

அதன் பிறகு வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிக்க ஆரம்பித்தேன் அப்போதுதான் எனக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறினார்கள் அது என்னுடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் நான் பார்த்தேன் நாலு ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும் பொழுது எந்த உணர்வு இருந்ததோ அதே உணர்வு தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும்போது இருந்தது என ராஜ்கிரன் கூறியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.? ஆத்தாடி ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.!

ஆனால் ராஜ்கிரன் அந்த பேட்டியில் எந்த படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன் என்று கூறவில்லை நமக்கு கிடைத்த தகவலின் படி 1996 ஆம் ஆண்டு கேவி பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்திற்காக தான் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஒரு கோடி ரூபாய் ராஜ்கிரண் சம்பளம் வாங்கியதாக தகவல் வைரலாகி வருகிறது ராஜ்கிரனுக்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் என ஆகியோர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி உயரத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.