ஹாஸ்பிடலுக்கு சென்ற முத்துவை அசிங்கப்படுத்திய சத்தியா.. மீனாவிடம் டாக்டர் சொன்ன உண்மை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

siragadikka aasai February 15 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்து இடம் பேசி விட்டு உள்ளே வருகிறார் அப்பொழுது மாமா வரேன்னு சொன்னாரா என மீனாவின் தங்கை கேட்க இல்ல அவருக்கு ஏதோ சவாரி இருக்கிறது என கூற உடனே இரவு வந்து விடுவாரா என பேச இல்ல எப்ப வருவார் என்று தெரியாதம் ரொம்ப தூரம் போயிட்டாராம் என சமாளிக்கிறார். சத்தியா மீனாவிடம் மாமா ஏதாவது சொன்னாரா என கேட்க வேற ஏதாவது என்றால்  என மீனா  கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல வந்துட்டு பாக்கறேன்னு சொல்லி இருக்காரு என சமாளித்து விடுகிறார் அடுத்த காட்சியில் மீனாவின் அம்மா நான் வீட்டுக்கு போய் கஞ்சி வைத்து எடுத்துக் கொண்டு வருகிறேன் அதுவரைக்கும் நீ இங்கே இரு மீனா என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு மீனா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது முத்துவும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

அண்ணாமலை மீனாவிடம் என்ன ஆச்சு தம்பிக்கு பரவாயில்லையா என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா பைக்கு திருடுன மாதிரி எங்கேயாவது பைக்க திருடிட்டு போய் விழுந்துருப்பான் என பேசுகிறார், ரவி அந்த சமயத்தில் வருகிறார் ரவியும் தம்பிக்கு என்னாச்சு என விசாரிக்கிறார் அந்த சமயத்தில் ஸ்ருதி உங்கள் தம்பி பைக் திருடுவாரா என கேட்க ரவி வாய மூடு சுருதி என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் முத்துவிடம் மீனா நீங்க ஏன் வரல என கேட்க எனக்கு சவாரி இருந்துச்சு சவாரி முடிச்சுட்டு வந்து இருக்கலாமே என பேச வேலை இருந்துச்சு என சொல்லி சமாளிக்கிறார் நீ இப்படி பேசக்கூடிய ஆளே கிடையாது என அண்ணாமலை கேட்க உடனே உண்மையை சொல்ல வருகிறார் பிறகு வாயை மூடி கொள்கிறார் உடனே காலேஜ் போகாம அங்கேயும் சுத்திகிட்டு இருக்கான் அவன போய் நான் பாக்கணுமா என திட்டுகிறார்.

ஐயோ சரஸ்வதி என்னை மன்னித்துவிடு என்னால எதுவுமே முடியல கதறிய தமிழ்.. இனி ஆயுசுக்கும் சரஸ்வதி ஜெயிலில்தானா..

ஆனா அண்ணாமலை நாளை காலை நீ போய் பாக்கணும் வேற வழியே இல்லை என்பது போல் கூற அடுத்த நாள் காலையில் முத்து ஹாஸ்பிடலுக்கு சத்யாவை பார்க்க போகிறார் சத்யாவுடன் நீ செஞ்ச வேலைக்கு இன்னொரு கையை உடைத்துவிட்டு இருக்கணும் என பேசுகிறார் அப்பொழுது சத்யா நான் என்ன பண்ணுனேன் என கேட்க வீடியோவை காட்ட இதுல என்ன தப்பு இருக்கு நான் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப என்னைய திருடிட்டன்னு உங்க அண்ணனும் உங்க அம்மாவும் எப்படி அடிச்சாங்க அதுக்கு இது சரியா போயிடுச்சு என பேசுகிறார்.

என்னடா திருடிட்டு நியாயம் பேசுறியா என்ன கேட்க ஆமா இங்க பணம் இல்லனா ஒண்ணுமே இல்ல நான் ஏழையாகவே பிறந்து ஏன் தப்பு இல்ல ஆனா ஏழையவே செத்தா என்னோட தப்பு எனக்கு பணம் வேணும் பணம் வேணும்னா என்ன வேணாலும் பண்ணுவேன் என பேசுகிறார். உங்க அம்மா உன் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க உங்க அக்கா அவ்வளவு நம்பரா அவங்களாம் ஏமாற்றி உனக்கெல்லாம் குற்ற உணர்ச்சியா இல்லையா என கேட்க அவங்க எல்லாம் தெரிஞ்சா என்ன ஆகும் என பேசுகிறார் அதற்கு வேணா காட்டுக்கோ எனக்கு ஒன்னும் பயம் இல்ல என்ன பேசுகிறார்.

போலீஸ்ல கூட கட்டிக்கோ அதை பத்தி எனக்கு கவலையே இல்ல ஏன்னா என் நண்பன் சிட்டி வெளிய எடுத்துடுவான். அதுமட்டுமில்லாமல் உன்ன மாதிரி டிரைவர் வேலை பார்த்து அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க சொல்றியா அதெல்லாம் என்னால முடியாது. உனக்கு அவ்வளவு தான் மரியாதை இங்கிருந்து போயிடு மாமாங்கறதுக்காக கால்ல விழ சொல்றியா அவ்வளவு எல்லாம் மரியாதை உனக்கு கொடுக்க முடியாது என முத்துவை ரொம்பவும் அசிங்கமாக பேசுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது நாளைய எபிசோடு மீனா டாக்டரிடம் கேட்க அவர் கையை யாரோ முறுக்கி உடைத்து இருக்காங்க அவரு பைக்ல இருந்து விழலை எனக்கு கூறுகிறார் அந்த சமயத்தில் முத்துவும் அவருடைய நண்பரிடம் அவன் ரொம்ப திமிரா பேசுனா அவனும் திருந்தவே மாட்டான் அவனை நாலு சாத்து சாத்துனா தான் சரி வரும் என கிளம்புகிறார்.