பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

pandian stores : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் பாண்டியன் கதிர் மட்டும் ராஜியை முறைத்தபடி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பின்னர் அவரைத் தொடர்ந்து கதிரை அடிப்பதற்காக வீட்டிற்கு குமரன் வருகிறார்.

குமரன் கதிரை அடிக்க பாண்டியன் வீட்டுக்கே வருகிறார். அப்போது கதிரின் அண்ணன்கள் தடுத்து  விடுகின்றனர், அங்கேயே குமரனும் கதிர் அண்ணன்களும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். உடனே அங்கிருந்த செந்தில் சண்டையை தடுத்து குமரனை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்துவிடுகிறார்.

ஐயோ சரஸ்வதி என்னை மன்னித்துவிடு என்னால எதுவுமே முடியல கதறிய தமிழ்.. இனி ஆயுசுக்கும் சரஸ்வதி ஜெயிலில்தானா..

இதை அனைத்தையும் பார்த்த கோமதி பிரச்சனை முடிந்து விடும் எனப் பார்த்தால் இப்போது பெரிதாகிறது என அழுவுகிறார். கோமதி அழுவதை  மீனா சமாதானப்படுத்துகிறார். அது மட்டுமல்லாமல் நீங்க இப்படி அழுதுகிட்டே இருந்தீங்கன்னா நானே போயி இங்க நடக்குற எல்லா பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம் என்று சொல்லிடுவேன் என பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மீனாவின் கணவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

இந்த நிலையில் தற்போது பிரமோ ஒன்று வெளியாகி உள்ளது.அந்தப் ப்ரோமோவில் பாண்டியன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என கோமதி அழுதபடி வீட்டில் இருப்பவர்களிடம் அப்பா இன்னும் வரவில்லை என சொல்லி தேட சொல்கிறார்.

வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

உடனே அவரைத் தேடி சரவணன் சொல்கிறார். அப்போது பாண்டியன் ஸ்டோர் குடோன் போல் ஒரு அறை  உள்ளது அங்கு பாண்டியன் படுத்திருக்கிறார். அவரை தேடி போன சரவணன் என்னப்பா இங்க இருக்கீங்க என கேட்கிறார். அப்போது பாண்டியன் என்ன பயந்துட்டியா நான் செத்துலாம் போகமாட்டேன் இங்கதான் இருக்கேன் என சொல்கிறார். உன் தம்பிங்க ரெண்டு பேரும் என்ன பண்ணி வச்சிருக்காங்க பாரு. நீ மட்டும் ஏன் இருக்க நீயும் உனக்கு புடிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணிக்க என  சரவணனிடம் கோபமாக சொல்கிறார்.

அப்போது சரவணன் அவங்க அப்பா கிட்ட நான் கண்டிப்பா நீங்க பார்க்கிற பொண்ண தான் பா கல்யாணம் பண்ணிப்பேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.