மாமா என்று கூட பார்க்காமல் சட்டையை பிடித்த சத்தியா கையை உடைத்துவிட்ட முத்து.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

siragadikka aasai february 13 : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா அண்ணாமலைக்கு டீ போட்டுக் கொடுக்கிறார் அப்பொழுது ஃபோன் வருகிறது, பாட்டி பேசுகிறார் பாட்டி அனைவரும் நலமா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் உங்க கல்யாண போட்டோவை பார்த்தான் ரொம்ப சூப்பரா இருக்கு என் பேராண்டி தாலி வாங்கி கொடுத்துட்டானா என பாட்டி கேட்க மீனா ஆமா வாங்கி கொடுத்துட்டாரு என பேசுகிறார் அப்பொழுது பரவாயில்லை அவனை சுத்தமா மாத்திட்டியே இனிமே எனக்கு முத்துவை பத்தி எனக்கு கவலையே கிடையாது என பாட்டி கூறுகிறார்.

அப்படியே பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அண்ணாமலைக்கு உடம்பு சரியில்லாததை கூறுவதற்கு முயற்சி செய்கிறார் மீனா ஆனால் அண்ணாமலை வேண்டாம் என தடுத்து விடுகிறார் அடுத்த காட்சியில் முத்து வருகிறார் முத்துவிடம் பாட்டி பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலை பற்றி கூற வேண்டாம் என தடுத்து விடுகிறார் அண்ணாமலை. அது மட்டும் இல்லாமல் பாட்டி நம்ம குடும்பத்தோட ஊர்ல எடுத்த போட்டோவை அனுப்பு எனக் கேட்கிறார்.

எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா வருகிறார் அப்பொழுது ஊரில் எடுத்த போட்டோவை பெருசாக பிரேம் பண்ணி இங்கே மாட்டு என அண்ணாமலை முத்துவிடம் கூற அதற்கு விஜய வேண்டாம் எதுக்கு போட்டோ எல்லாம் மாட்டிகிட்டு இருக்கீங்க என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை நம்ம இருந்த கொஞ்சம் சந்தோஷமே அதுதான் அது பார்க்கும்போது அந்த சந்தோஷம் ஞாபகம் வரும் என அண்ணாமலை கூறுகிறார்.

உடனே முத்து அந்த போட்டோல நானும் மீனாவும்  இருக்கோம் இல்ல அதனால தான் அம்மா வேணாங்குறாங்க அது உங்களுக்கு தெரியுதா என பேசுகிறார். உடனே முத்து கிளம்பி போய் போட்டோவுக்கு பிரேம் கொடுக்கப் போகிறார் அப்பொழுது  விஜயாவிடம் செயினை பறித்தது இவர்கள்தான் என காமிக்கிறார் உடனே அதை பார்த்து முத்து அதிர்ச்சி அடைந்து நேரடியாக மீனா வீட்டிற்கு செல்கிறார் அங்கு சென்றவுடன் மீனாவின் அம்மா முத்துவை வாங்க மாப்பிள்ளை என கூறி உட்கார வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுதான் விஜய்யின் சூரியவம்சம் வர்ஷன்.. என்னைய புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணிருக்கணும்…

மீனாவோட அப்பா போனதுக்கு பிறகு எல்லாமே சத்யா தான் அவன் தான் எல்லாத்தையும் பாத்துக்கிறான் நல்லா பொறுப்பானவனா மாறிட்டான் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்து சொல்ல வந்ததை சொல்லாமல் மறைத்து விடுகிறார் நம்மளால் ஏன் இவர்கள் சந்தோஷம் போக வேண்டும் என நினைத்து கூப்பிடுகிறார். உடனே காலேஜுக்கு சென்று சத்தியா அங்கு இருக்கானா என விசாரிக்க சொல்கிறார் ஆனால் சத்யா இரண்டு, மூன்று நாட்களாகவே காலேஜ் வரவில்லை என கூறியவுடன் நேரடியாக செட்டுக்கு வருகிறார்.

ஆனால் அதற்கு முன்பு சத்யா மற்றும் சிட்டி இருவரும் வந்து முத்துவின் நண்பன் பணம் கொடுக்காததால் தகாத வார்த்தையில் பேசி விடுகிறார் காரை தூக்காமல் உன் பொண்டாட்டியையா தூக்க முடியும் என பேசுகிறார் உடனே முத்துவின் நண்பன் கோபப்பட்டு சிட்டியை அடித்து விடுகிறார் சிட்டியை அடித்தவுடன் சத்தியா முத்துவின் நண்பனை அடிக்க பெரிய சண்டையாக மாறுகிறது அந்த சமயத்தில் முத்து வந்து என் நண்பன் மேலயா கைய வைச்ச  என சிட்டியை பொல பொல என்று பொளந்து கட்டுகிறார்.

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட பிரபுதேவா இயக்கிய திரைப்படம்.! தலைவன் அப்பவே மாஸ் காட்டியுள்ளாரே…

அப்பொழுது என் நண்பன் மேல கைய வைக்காதீங்க என சத்தியா முத்துவை சட்டையை  இழுத்து விட்டு பேசுகிறார் உடனே கோபப்பட்டு மீண்டும் சிட்டியை அடிக்க அப்பொழுது சத்யா சட்டையை பிடித்து அவன் என பிரண்ட்  மேல கைய வச்சா நான் மாமான்னு கூட பார்க்க மாட்டேன் என பேச உடனே முத்துவுக்கு கோவம் வருகிறது உடனே கையை உடைத்து விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.