விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அப்போ சிம்புவுக்கு முன்னாடி இவர்தானா…

Vinnaithaandi Varuvaayaa : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தந்து வரும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியானது.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கார்த்தியாக சிம்புவும், ஜெஸ்ஸியாக திரிஷாவும் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் காதல் உணர்வை தூண்டி விட்டார்கள்.

ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான ஜெஸ்ஸியை பார்த்த நொடியிலேயே காதலிக்க தொடங்குகிறார் கார்த்தி தன்னைவிட ஜெஸ்ஸி மூத்தவராக இருந்தாலும் அவர் பின்னால் அலைந்து தனது காதலை வெளிப்படுத்துவார். ஜெஸ்ஸியும் ஒரு கட்டத்தில் இந்த காதலுக்கு ஒப்புக்கொள்ள இருவரும் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பே பிரிந்து விடுகின்றனர்.

ஜெஸ்ஸியை மீண்டும் பார்க்க வேண்டும் என நினைத்து வரும் கார்த்தி சில வருடங்கள் கழித்து ஃபாரினில் பார்க்கிறார் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து விடுகிறார்கள் இவ்வாறு எமோஷனலான காதலுடன் படம் நிறைவடையும். விண்ணைத்தாண்டி வருவாயா படம் குறித்து இயக்குனர் கௌத மேனன் கூறிய பழைய தகவல் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

அதாவது இப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் சிம்புவுக்கு முன்பு கௌதம் மேனன் தனுஷை கமிட் செய்ய முடிவு செய்துள்ளார். கதை பிடித்ததால் தனுஷ் ஓகே சொல்ல கடைசி சூழலில் தனுஷால் படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து கௌதம் மேனன் சிம்புவை அணுகி கதை கூற பிறகு இவர்களுடைய கூட்டணியில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது விண்ணை தாண்டி வருவாயா.