அஜித் பத்திரிகையாளர்களை பார்ப்பதில்லை, ஒதுக்கி வருகிறார் என சொல்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி உருவாகி வருகிறது படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ரெஜினா போன்றவர்கள் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கின்றன. அஜித் சமீபகாலமாக யாரையும் பார்ப்பதில்லை குறிப்பாக பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதைகளை ஒதுக்கி வருகிறார் என பல செய்திகள் வெளியாகின்றன.

பிகில் முதல் லியோ வரை.. பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய தளபதி படங்கள்.!

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர் கோடாங்கி பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்தார் படத்தின் தொடங்கும்போதும் சரி முடியும் போதும் சரி, அவர் எங்களை சந்தித்தார்.

அப்பொழுது எல்லாம் நாங்கள் 10, 15 பேர் தான் இருந்தோம் ஆனால் எங்களுடன் ரொம்ப நெருக்கமாக இருந்து வந்தார். எங்களுடன் வரும் பத்திரிகையாளர்களில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள் என செய்தி அஜித்துக்கு தெரிய வர அவர் பணத்தை கட்டினார் ஆனால் அந்த பத்திரிகையாளர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்.

முக்கிய இடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ.. இத்தனை கோடி வசூலா.?

நாங்கள் அனைத்து வேலையும் முடித்துவிட்டு வீட்டிலிருந்து அவருடைய பாடியை தூக்கினோம் அப்பொழுது ஒரு கை வந்து தூக்கியது அவர்தான் அஜித்.. அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த விஷயத்தை இன்று வரை அஜித் யாரிடமும் சொல்லி இருக்கிறாரா.. இப்படி கண்ணுக்கு தெரியாத பல உதவிகளை செய்துள்ளார் அஜித் என பேசினார்.