சாப்பாட்டில் கை வைக்கும் பொழுது பிரதீப்பை பிச்சைகாரனை விரட்டுவது போல் விரட்டிய பிரபலம்.! வெளிவந்த வேதனையான சம்பவம்

pradeep antony : சினிமா பிரபலங்கள் பலரிடம் தங்களுடைய கசப்பான அனுபவம் குறித்து தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் அந்த வகையில் பல நடிகர் நடிகைகளிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பல பிரபலங்கள் பதில் அளித்துள்ளார்கள் அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி இடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ளார் பிரதீப் ஆண்டனி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி போட்டியாளர்களாக பங்கேற்றார். ஆனால் சக போட்டியாளர்கள் தங்களுடைய சூழ்ச்சியால் பிரதீப்பை வீட்டை விட்டு வெளியேற வைத்தார்கள்.  இவர்  அருவி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

கும்கி படத்தில் உண்டியலாக நடித்தவர் இந்த பிரபல நடிகரின் மகனா.! வைரலாகும் புகைப்படம்

இதனைத் தொடர்ந்து வாழ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் கவின் நடிப்பில் வெளியாகிய டாடா என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் சக போட்டியாளர்களின் சூழ்ச்சியால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதற்கு பல நடிகர்கள் மற்றும் இதற்கு முன் நடைபெற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் என அனைவரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிரதீப் தன்னுடைய கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

நம்ப பசங்க எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாத்தீங்களா… என்ன ரஷ்மிகா மேடம் சிக்கி கிட்டிங்களே இப்படி

பிரதீப் பேசியது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது தன்னுடைய முதல் திரைப்படத்தின் பொழுது பிரதீப் பசி வந்ததால் சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். அப்பொழுது புரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார் நான் ஒன்னும் அந்த திரைப்படத்தில் ஹீரோ எல்லாம் கிடையாது ஆனால் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு லெவல் தான் ஆனால் சாப்பாடு போடுபவரை பொறுத்தவரையில் நான் அந்த திரைப்படத்தின் ஹீரோ என நினைத்துக் கொண்டார்.

அவர் எனக்கு சாப்பாடு வைக்கும் பொழுது திடீரென புரொடக்ஷன் மேனேஜர் வந்து டேய் டேய் இவனுக்கெல்லாம் எதுக்கு சாப்பாடு போடுற என்று நாயை பேசுவது போல் கேவலமாக பேசிவிட்டார் அன்றிலிருந்து அந்த செட்டில் நான் சாப்பிடுவதே கிடையாது என பிரதீப் ஆண்டனி வருத்தத்துடன் பேசி உள்ளார்.