திடீரென சன்னியாசியாகி ஷாக் கொடுக்கும் சரவணன்.! அதிர்ச்சியில் மயங்கி விழும் கோமதி!! கோவத்தில் பாண்டியன்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் அனைவரும் காலையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ராஜியும் மீனாவும் டீ போட்டு எடுத்து வந்து கொடுக்கின்றனர். அந்த சமயத்தில் கதிர் கேக் வாங்கி எடுத்து வருகிறார். உடனே கேக்கை பார்த்து அரசி என்ன பிளேவர் என கேட்க அதற்கு கதிர் பிளாக் பாரஸ்ட் என சொல்கிறார்.

ஏன் வேற பிளேவர் வாங்க வேண்டியது தானே என சொல்கிறாள் அதற்கு மாமா கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு அதான் வாங்க முடியும் என சொல்கிறார். உடனே பழனி ஆட்டைய போட்டதுன்னு சொல்லுங்கடா என சொல்கிறார் அதற்கு செந்தில் மாப்பிள்ளைக்காக கார் வீடுன்னு வாங்கி தராங்க நீ  500 ரூபா தந்துட்டு ஓவரா பேசுற என சொல்கிறார்.

கேக் வெட்ட நேரம் ஆகுது எங்க சரவணன காணுமே எனக் கேட்கின்றனர். அப்பா அம்மா வந்ததும் கேக் வெட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோமதியம் பாண்டியனும் உள்ளே வருகின்றனர். பாண்டியன் முள் குத்திய வலி தாங்க முடியாமல் கோமதி மீது சாய்ந்த படி வருகிறார் அதை பார்த்த அனைவரும் பதறுகின்றனர்.

செகண்ட்ஸ் கார் என்பதால் கேவலமாக பேசிய மனோஜ்.. முத்து கொடுத்த தரமான பதிலடி சிக்கித் தவிக்கும் ரோகிணி.. எந்த பால் போட்டாலும் கடைசில என்கிட்ட தானே வருது..

உடனே என்ன என அனைவரும் கேட்டதும் அதற்கு கோமதி காளில் மூல்குத்தி விட்டது என சொல்கிறார் உடனே மீனா நான் முள்ள எடுத்து விடுறேன் என சொல்லி பாண்டியன் காலில் இருக்கும் முல்லை எடுத்து விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து  கேக் வெட்ட நேரம் ஆகுது சரவணன் எங்க காணும் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சூடம், திருநீர, பத்தி வாசம் என அனைத்தும் கலந்தது போல வருகிறது. உடனே கோமதி நாம கோவிலுக்கு போயிட்டு வந்தோம் இல்ல கடவுளும் நம்மக்கூட வீட்டுக்கு வந்துட்டாரு போல என சொல்கிறார்.

அப்போது சரவணன் மாலை போட்டு கொண்டு வீட்டுக்கு வருகிறார். கழுத்துல உத்திராட்சம் என பயங்கரமாக இருக்கு என கேட்க அதற்கு சரவணன் நான் இன்னைல இருந்து லவ்தீகத்தை விட்டுட்டு பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க போறேன் என சொல்கிறார். இனிமே என் வாழ்க்கையில கல்யாணங்கற பேச்சுக்கே இடம் இல்லை எனக் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் மீனா ராஜி  சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

பின அறையில் செத்து கிடப்பது அர்ஜுனா.. கண்ணீர் விட்டு கதறும் ராகினி.. பரமு நீ தான் ஏதோ கேம் விளையாடுறேன்னு தெரியுது…

அதே நேரத்தில் பாண்டியன் கடுப்பாகிறார். உடனே அரசி பிரம்மச்சாரியம்னா என்ன என கேட்கிறார்.அதற்கு பழனி கல்யாணமே பண்ணிக்கிறது இல்லன்னு அர்த்தம் எனக்கு சொல்கிறார். உடனே கோமதி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். உடனே என்னாச்சு என்னாச்சு என அனைவரும் கத்துகின்றனர்.சத்தத்தை கேட்டு எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா மற்றும் அண்ணிகள் என்னாச்சு ஏதோ பிரச்சனையோ ராஜ்ஜிய  அந்த பையன் போட்டு அடிக்கிறானோ என்ன ஆச்சோ வாங்க வெளிய போய் பார்க்கலாம் என செல்கின்றனர்.உடனே ராஜியின் அப்பா  வீட்டில் இருந்து வெளிய போனா யாரும் உள்ள வரக்கூடாது என சொல்லி விடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.