பிறந்தநாள் கூட பார்க்காம சரவணனுக்கு அறைவிட்ட பாண்டியன்! குமரவேலுக்கு அறைவிட்ட மாரி.. பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில் சரவணன் அனைவருக்கும் விபூதி விட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டியன் கடுப்பாகி சரவணனுக்கு ஒரு அரை விடுகிறார். கீழே விழுந்து எழுந்து நிற்கிறார் சரவணன். அடுத்த அஞ்சு நிமிஷத்துல நான் வாங்கி கொடுத்த புது டிரஸ் போட்டு வந்து இங்க நிக்கல என்ன நடக்கும்ன்னு தெரியாது என கத்துகிறார்  பாண்டியன்.

உடனே சரவணன் போய் பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்த புது டிரஸ் போட்டு கொண்டு வந்து பேன்ட் ஷர்ட் எல்லாமே ரொம்ப அழகா இருக்குப்பா என சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாண்டியன் இல்ல இந்த காவி டிரஸ் எங்கடா வாங்குன வாடகைக்கு எடுத்தியா என கேள்வி கேட்கிறார். அதற்கு சரவணன் இல்லப்பா இத நான் வாங்கி தச்சன் என சொல்கிறார். உடனே எவ்வளவு ஆச்சு எனக் கேட்க 800 ரூபா ஆச்சுப்பா என சொல்ல உனக்கு ஏது அவ்வளவு காசு எனக் கேட்கிறார். அதற்கு ஓவர் டைம் பண்ணி சம்பாதிச்சேன் என சொல்கிறார்.

இப்படித்தான் காசு சம்பாரிச்சு வீணாக்குறதாடா என திட்டுகிறார். இன்னும் 49 நாள்ல நான் கண்டிப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவேன் என சொல்கிறார். உடனே சரவணன் சரிப்பா நான் வேலைக்கு கிளம்புறேன் எனக்கு லேட் ஆகுது எனச் சொல்ல அரசி அண்ணா நாங்க உங்களுக்கு கேக் வாங்கி வச்சிருக்கோம் வெட்டுங்க எங்களுக்கும் லேட் ஆகுது என சொல்கிறார்.

ஐஸ் கட்டியை தூக்கி விஜயா தலையில் வைத்த ரோகிணி.. மொத்த சோலியை முடித்து ரிவிட் அடித்த மீனா முத்து..

கேக் வாங்க காசு ஏதுடா என கேட்கிறார் பாண்டியன். மாமா தான் கொடுத்தாங்க என சொல்ல பழனி உனக்கு ஏது காசு கல்லால இருந்து எடுத்துட்டியா கணக்கு ஏதாவது குறையட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் உன்ன என சொல்கிறார் பாண்டியன். அந்த நேரத்தில் எதிர் வீட்டில் இருந்த அண்ணி பழனிக்கு போன் பண்ணுகிறார்.

உடனே பழனி அந்த வீட்டுக்கு போகிறார். அங்கு என்ன நடந்தது கோமதி கத்துற சத்தம் கேட்டுதே  என கேட்கின்றனர். அது மட்டுமில்லாமல் ராஜிக்கு என்ன ஆச்சு ஏதாவது வீட்ல பிரச்சனையா எனக் கேட்கிறார்கள். ராஜி எல்லாம் அங்க ராணி மாதிரி இருக்கா. அக்கா, மாமா, செந்தில், சரவணன் என எல்லாரும் அவள நல்லா பாத்துக்குறாங்க. அதுவும் அந்த பொண்ணு மீனா இருக்கே கூட பிறந்த தங்கச்சி மாதிரி ராஜிய பாத்துக்குது ராஜிக்கு அங்க ஒரு பிரச்சனையும் இல்ல என்ன சொல்கிறார்.

அப்புறம் அங்க என்னதான் பிரச்சனை என கேட்க அதற்கு சரவணனுக்கு பிறந்தநாள் என சொல்கிறார் பழனி, பிறந்தநாள்னா கேக் தானே வெட்டணும் ஏன் கத்துறாங்க எனக் கேட்க சரவணன் திடீர்னு சன்னியாசியா போறேன்னு  வந்து நிக்கிறான். அதான் அக்கா மயங்கி விழுந்துட்டா அப்புறமா மாமா பேசி எல்லாத்தையும் சமாதானப்படுத்திட்டாங்க என நடந்த விஷயத்தை அனைத்தையும் சொல்கிறார்.

தமிழிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.. வேலில போற ஓணானை தூக்கி வேட்டியில் விட்டுக் கொண்ட பரமு… நீ விரிச்ச வலையில நீனே சிக்கி கிட்டியே மாப்பிள்ளை .

அந்த நேரம் பார்த்து குமரவேல் அங்கு வர என்ன பெரியம்மா இன்னும் அந்த ஓடுகாளி ராஜிய பத்தி நெனச்சிட்டு இருக்கீங்களா என கேட்கிறார். உடனே கோபமான மாரி என்ன பெரியம்மாவையே எழுத்து பேசுறியா என குமரவேலுவை ஒரு அரை விட்டு உங்க அப்பாவ தான் என்னால எதுவும் கேட்க முடியல ஆனா நீ நான் பெத்த புள்ள  உன்ன கேக்குறதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என திட்டுகிறார். அந்த வீட்ல எது நடந்தாலும் இங்க வந்து சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்கல்ல என பழனியை திட்டுகிறார் குமரவேல்.

அதனை தொடர்ந்து பழனி பரவாயில்லையே இங்க கூட எல்லாரும் விட்டுக்கொடுத்துக்காம பாசமா ஒண்ணா இருக்கீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா நல்லது தான் என பழனி சொல்கிறார்.

அதே சமயத்தில் வீட்டில் நடந்த அனைத்தையும் கடைக்கு சென்று கடையில் இருக்கும் சித்தப்பாவிடம் பழனி சொல்கிறார். அவர் பாண்டியன் வந்ததும் அனைத்தையும் கேட்கிறார்.என்ன நடந்த அனைத்தையும் ஒன்னு விடாம சொல்லிட்டானுங்களா என பாண்டியன் கேட்கிறார். இந்த புரோக்கர நம்பி இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்ல ஒரு பொண்ணு கூட இன்னும் பார்த்து சொல்லல என பாண்டியன் சொல்ல, அப்போது செந்தில் அப்பா உங்களுக்கு தெரியாம நானும் கதிரும் மாமாவும் சேர்ந்து மேட்ரிமோனியில் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க அப்ளை பண்ணி இருக்கோம் என சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.