செந்திலால் கோபமான பாண்டியன்!! தங்க மயிலை கிண்டல் பண்ணும் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில்  டைனிங் டேபுளில்  உட்கார்ந்து  அனைவரும் சாப்பிடுகின்றனர். அப்போது சரவணணை மாமா மாமா என சொல்லி அனைவரும் ஓட்டுகின்றனர். உடனே செந்தில் மீனாவை பார்த்து நீ மட்டும் ஏன்  மாமான்னு கூப்பிடல என கேட்கிறார் அதற்கு பாண்டியன் அதுக்கு தான் வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் என சொல்கிறார். உடனே அனைவர் முகமும் சோர்ந்து போகிறது.

கோமதியோ அவர் பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க அவர் சும்மா சொல்லி இருப்பாரு என சொல்கிறார். அனைவரும் சோகமாக இருப்பதால் அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக கதிர் உடனே பேச்சை மாற்றுகிறார். ராஜி கிச்சனை சுத்தம் பண்ணி கொண்டி ருக்கிறார். அப்போது அங்கு வந்த மீனா தங்க மயிலை கிண்டல் பண்ணுவது போல் மாமா என்ன வேலை செய்யணும் என ராஜியை மாமா மாமா என கூப்பிடுகிறார்.  மீனாவும் ராஜியும் பேசி கொள்கின்றனர். அப்போது மீனா ராஜியிடம் நேத்துதான் பார்த்தாங்க அதுக்குள்ள எப்படி மாமான்னு கூப்பிட முடியும் அது மட்டும் இல்லாம  தெரியாம போன் பண்ணுன மாதிரி தெரியல வேணும்னே பேசுன மாதிரி தான் இருந்தது என பேசிக் கொள்கின்றனர். மீனாவுக்கு அவங்க குடும்பத்து மேல ரொம்ப சந்தேகம் அதிகமா இருக்கு.

பழனிசாமிக்கு பாக்யா மீது வந்த காதல்!! காதல் கண்கட்டுதே. பொறுத்திருந்து பார்ப்போம்

உடனே அதைக் கேட்ட கோமதி என்னடி என்னோட பெரிய மருமகளை ரெண்டு பேரும் சேர்ந்து  கிண்டல் பண்றீங்களா என கேட்கிறார். உடனே அவரையும் மாமா என கூப்பிடுகிறார்  மீனா. உங்க மருமக வரத்துக்கு முன்னாடியே நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க அவங்க தான் உங்களுக்கு பெருசு இல்ல என மீனா கேட்கிறாள். உடனே அதற்கு கோமதி எனக்கு நீங்க மூணு பேரும் ஒன்னு தான் என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து மாடியில் சரவணன் படுத்துக்கொண்டு ஒரே காதல் பாட்டாக கேட்கிறார். உடனே அவரை போய்  கதிர், செந்தில் பழனி என அனைவரும் சந்தோஷமா இருக்கியா என கேட்டு ஓட்டுகின்றனர். இதே போல பெண் வீட்டில் தங்கமயிலும் அவருடைய தங்கச்சியும் பேசி கொள்கின்றனர்.

செழியனை கேள்வி கேட்கும் ஜெனி! கடுப்பாகி சண்டை போடும் பாட்டி… பாக்கியலட்சுமி

ஃபர்ஸ்ட் அவரை பார்க்கும் போது எனக்கு புடிக்கல ஆனா இப்ப பேசுறது பழகுறதெல்லாம் பார்க்கும்போது நல்ல பையனா, நல்ல குடும்பமா இருக்கு என சொல்கிறார். எல்லாம் நல்லா இருக்கு ஆனா நம்ப சொல்லி வச்சிருக்க பொய்ய நினைச்சா தான் பயமா இருக்கு என பேசிக்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.