பழனிசாமிக்கு பாக்யா மீது வந்த காதல்!! காதல் கண்கட்டுதே. பொறுத்திருந்து பார்ப்போம்

தற்போது வெளிவந்துள்ள பாக்கியலட்சுமி ப்ரோமோவில் பழனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனைவரும் பழனி வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அதாவது பாக்கியா, இனியா, எழில் பாக்கியா மாமனார், செல்வி மற்றும் பழனியின் கூடப்பிறந்தவர்கள் என அனைவரும் வந்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பழனி மற்றும் பாக்யாவுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் படித்த அவர்களது  நண்பர்களும் வந்திருக்கின்றனர்.

அனைவரும் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது. பழனியின் அக்கா பையன் ஏன் மாமா இன்னும் நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க என கேட்கிறார். அதற்கு பழனியோ இன்னும் நீ மட்டும் தாண்டா கேட்காம இருக்க நீயும் கேட்டுட்டியா என சொல்ல உடனே எழிலும் தாத்தாவும் சேர்ந்து கேட்கின்றனர்.

உங்களுக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும் என  கேட்க அதற்கு பழனி என்ன கேட்காமலே  எனக்கு புடிச்ச மாதிரி சமைத்து தரணும் என சொல்லப் போகிறார். உடனே பாக்யா ஸ்வீட் செய்து கொண்டு வந்து பழனியிடம் கொடுத்து உங்களுக்கு புடிச்ச ஸ்வீட் செஞ்சிருக்கேன் என சொல்கிறார்.

மேலும் எங்க அம்மாவ நல்லா பாத்துக்கணும் என சொல்லப் போகிறார் உடனே பாக்யா அவங்க அம்மாவை பத்திரமாக கூப்பிட்டு வந்து ஹாலில் உட்கார வைக்கிறார். அதையும் பார்த்து பழனி சந்தோசப்படுகிறார்.  அடுத்தது என் அக்கா தங்கச்சிய அவங்க சகோதரி மாதிரி பாக்கணும் என  சொல்கிறார்.

அப்படி பழனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்கியா  பழனியின் அக்கா தங்கச்சியிடம் நன்றாக பேசி பழகுகிறார். அதோட மட்டுமில்லாமல் அவங்கள பார்த்த உடனே ஒரு லைட் எரியனும் என சொல்கிறார். உடனே பாக்கியாவை  பார்த்ததும் அவர் மனசுல ஒரு பட்டாம்பூச்சி போல் சிறகடித்து  லைட் எரிகிறது. பாக்யாவை பார்த்ததும் அவருக்கு காதல் வருகிறது. உடனே பாக்யா பின்னாடியே போகிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது. பாக்கியாவிற்கு பழனி மேல் காதல் வருகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.