செழியனை கேள்வி கேட்கும் ஜெனி! கடுப்பாகி சண்டை போடும் பாட்டி… பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் நைட் பெட்ரூமில் செழியன் போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி என்ன இன்னும் போன் பாத்துட்டு இருக்க செழியா எனக் கேட்கிறார் ஒரு மெயில் அனுப்பனும் அனுப்பிட்டு வரேன் என சொல்ல உடனே ஜெனி செழியனின் போனை வாங்கி பார்த்துவிட்டு இனிமே போன் பார்க்கிறத குறைச்சுக்கோ  செழியா என சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில்  தாத்தா, பாட்டி ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது பாட்டி கால் ரொம்ப வலிக்குது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஜெனி காபியை கொடுத்துவிட்டு பாட்டி நான் வேணா சுடு தண்ணி வச்சு ஒத்தடம் கொடுக்கட்டுமா என கேட்கிறார். அதற்கு பாட்டி வேண்டாம் என சொல்றாங்க அப்போது அங்கு வந்த எழில் அதெல்லாம் சரிப்பட்டு வராது பாட்டிக்கு நான் காலப்பிடிச்சு விட்டா எல்லாம் சரியாயிடும் என சொல்லிவிட்டு பாட்டியின் காலை பிடிக்கிறார்.ஆனால் பாட்டியோ கோபத்தில் என் வலிய நான் பாத்துக்குறேன் என  சொல்லிவிட்டு போகிறார். அதற்கு தாத்தா வயசாயிடுச்சு இல்ல கொஞ்சம் கோவம் அதிகமா தான் இருக்கும் போக போக சரியாயிடும் என சொல்கிறார்.

மகனுக்காக வயசுல பெரிய பொண்ண பார்த்த பாண்டியன்! குடும்பத்தை கைக்குள்ள போட்டுக்க ஐடியா கொடுக்கும் தங்க மயிலின் அம்மா.. ஓன் வில்லத்தனத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டியேம்மா.

மேலும் எழிலும் அமிர்தாவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றனர் அப்போது பாக்கியா அங்க வந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்துசெல்வி பாக்கியா கிச்சனில் சமைக்கின்றனர். அங்கு ஜெனியும் பாட்டியும் காபி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர்.அப்போது செழியன் ஆபீசுக்கு கிளம்பி வந்து போயிட்டு வரேன் என  அனைவரிடமும் சொல்கிறார்.

ஜெனியோ இன்னைக்கு என்ன வேலை எத்தனை மணிக்கு வருவ என கேள்வி மேல் கேள்வி கேட்க உடனே கடுப்பான பாட்டி என்ன நீ ஒரு லாயர் மாதிரி ஆபீஸ் போறவன நிக்க வச்சு இத்தனை கேள்வி கேக்குற என கேட்கிறார். உடனே செல்வி நீங்க மட்டும் தாத்தா இங்க இருக்குற கிரவுண்டுக்கு போனாக் கூட எத்தனை கேள்வி கேக்குறீங்க அவ கேட்டா என்ன இதுக்கு முன்னாடி கேட்காம விட்டுட்டா அதனால இப்ப கேக்குற எல்லாம் நல்லதுக்கு தான் என செல்வி சொல்கிறார். பாக்கியாவுக்கும் ஜெனி ஏன் இப்படி பண்ணுகிறார் என புரிகிறது.

மேலும் அடுத்த சீனில் பழனி உடைய அம்மா பழனியிடம் உங்க அப்பா என் கனவுல வந்தாரு இன்னும் ஏன் அவனை ஒத்தையா வச்சிருக்க என கேட்டு என்ன திட்றாரு என சொல்கிறார். பழனி நான் எங்கம்மா தனியா இருக்கேன் நீ தான் என் கூட இருக்கியே என சொல்ல நானும் அதான் சொன்னேன் என சொல்லி உனக்கு பிறந்தநாள் வருதுல்ல அதான் உங்க அப்பா கனவுல வந்து இருக்காங்க என சொல்கிறார் மேலும் இப்போ உனக்கு உனக்கு  45 வயசு ஆகப்போகுது எல்லாரையும் வரவெச்சு பிறந்தநாள் கொண்டாடனும் என சொல்கிறார்.

ஏன்பா ரவி முத்துவை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா.. ஸ்ருதி உங்க அப்பா உன்ன நல்லா ஏமாத்துறாரு.. வசமாக சிக்க போகும் சத்தியா..

உடனே பழனி பிறந்தநாள் எல்லாம் கொண்டாட வேண்டாம் நான் என்ன சின்ன புள்ளையா என சொல்ல அதற்கு பாட்டி நீ எனக்கு மட்டும் கொண்டாடுற இல்ல நானும் கொண்டாடணும் என் பேச்சைக் கேளு என திட்டிவிட்டு பாக்யாவை வர சொல்கிறார். பாக்கியாவோ உருண்டை குழம்பு, மட்டன் தொக்கு  என செய்து கொண்டு வருகிறார். மேலும் பாட்டி பாக்யாவிடம் இந்த பிறந்த நாளுக்கான ஆர்டர் நீ எடுத்துக்கோ ஒரு நூறு பேர் வருவாங்க உனக்கு என்ன சமைக்கனும்னு தோணுதோ சமைச்சுக்கோ என சொல்லிவிட்டு, இரு உனக்காக நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என சொல்கிறார்.

உடனே பாக்யா  அதெல்லாம் வேணாம் நானும் வரேன் என சொல்ல உனக்கும் யாராவது ஒன்னு செஞ்சு தரணும்ல நீயே எப்ப பார்த்தாலும் வேலை செஞ்சுகிட்டு இருப்பியா இரு நான் போய் போட்டுட்டு வரேன் என சொல்லிவிட்டு கிச்சனுக்கு போகிறார்.அப்போது பாக்யாவும் பழனியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைப் பார்த்து பாட்டி சந்தோஷப்பட்டு உனக்கு பாக்யாவை பிடிக்கும்னு எனக்கு தெரியும். ஆனா கேட்டா அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்லுவ என மனசுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.