கதிர் வேலைக்கு போவது தெரிந்து அழும் ராஜி!! யூனிஃபார்முடன் வந்து வேலைக்கு போறேன்னு திமிராக பாண்டியனிடம் நடந்து கொண்ட கதிர்..

பாண்டியன் ஸ்டோர்ஸ்2 இன்றைய எபிசோடில் கதிர் கடைக்கு போய் பாண்டியன் முன்னாடியே காசு கொடுத்து கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்து கொண்டு நான் வேலைக்கு போறேன்.இது என்னோட பிரண்டோட வண்டி இன்னும் கொஞ்ச நாள்ல காசு சம்பாரிச்சு புது வண்டி, கார் எல்லாம் வாங்க போறேன்.அது மட்டும் இல்லாம இனிமே என்னோட காலேஜ் பீஸ் எல்லாத்தையும் நானே கட்டிப் பேன் யார்கிட்டயும் காசுனு வந்து நிக்க மாட்டேன் என சொல்கிறார்.

உடனே செந்தில் அப்ப காலேஜ் போறத விட்டுட்டியாடா என கேட்கிறார்.  அதற்கு கதிர் அதெல்லாம் விடல  நான் பார்ட் டைம்மா தான் ஃபுட் டெலிவரி பண்ண போறேன் என சொல்கிறார். உடனே தாத்தா வெளியே வந்து ஏண்டா இப்படி அப்பாவ எதிரி மாதிரி நினைச்சு பேசுற அவர் மனசு கஷ்ட படாத என கேட்கிறார். அதற்கு இல்ல தாத்தா அவர் வெளிய எதுவும் சொல்ல முடியாம உள்ளுக்குள்ள என்ன நினைச்சு ரொம்ப கஷ்டப்படுறாரு அதான் தாத்தா அவர் மாதிரியே  நான் பேசிட்டு வந்தன் என சொல்கிறார்.  அதற்கு தாத்தா அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கியேடா என சொல்ல ஆமாம் அவர் பையனாச்சே என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அடப்பாவி வயித்து புள்ள காரின்னு கூட பாக்காம குழந்தையை கொல்ல பாக்குறியே.. வளைகாப்பு அர்ஜுன் போட்ட மாஸ்டர் பிளான்.. பல்பு வாங்கி அசிங்கப்பட்டு நின்ற தமிழ்..

அடுத்த சீனில்  வீட்டில் கோமதி, மீனா, அரசி மற்றும் ராஜி என பேசிக்கொள்கின்றனர். அப்போது கோமதி இன்னும் கதிர காணுமே என கவலைப்படுகிறார். நேத்து நைட்டே வரல இன்னைக்கு என்ன செய்யப் போறானோ என சொல்லி மீனாவிடம் அவனுக்கு ஃபோனை போடு என சொல்கிறார். அதற்கு அரசி, ராஜி அண்ணி தானே போன் பண்ணனும் ஏன் மீனா அண்ணிய போன் பண்ண சொல்றீங்க என கேட்கிறார். அது மட்டுமில்லாமல்  ராஜியை பார்த்து நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்து பேசுனத பாத்ததே இல்ல என கேட்கிறார். அதற்கு மீனா இல்ல மாமா இவங்க மேல கோவமா இருக்காங்கள அதனாலதான் என சொல்கிறார்.

அதற்கு அரசி நீங்களும் செந்தில் அண்ணனும் கூட தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்தீங்க ஆனா நீங்க அப்படி இல்லையே என கேட்க உடனே கோமதி இது இதெல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்ணு உன் அப்பா உன்னை கலெக்டர் ஆகணும்னு சொன்னார்ல ஒழுங்கா போய் படி என அவர் வாயை மூடுகிறார்.

மேலும் அதனைத் தொடர்ந்து அனைவரும் நைட் சாப்பிட உட்காருகின்றனர். அப்போது கோமதி இன்னும் கதிரக்காணும் என புலம்புகிறார். உடனே பழனி கதிர் வேலைக்கு போய் இருக்கான் அக்கா என எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ராஜி வருத்தப்படுகிறார். உடனே கோமதி அவனை நான் எப்படி வளர்த்தேன் ஏன்டா இப்படி கஷ்டப்படுறான் . அவனுக்கு போன் பண்ணி உடனே வர சொல்லுங்கடா என அழுது கொண்டே சொல்கிறார்.

கோடீஸ்வரி புடவையை கிழித்து பழி வாங்கிய சித்ராதேவி!! சும்மா ஓட ஓட விரட்டிய கோட்டி!! பயந்து சரண்டரான சித்ரா.

மேலும் இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சுதுனா அவ்வளவுதான் என கோமதி சொல்ல அதற்கு செந்தில் அதெல்லாம் அப்பாவுக்கு தெரியும், அவன் கடைக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போனான் என சொல்கிறார். உடனே சரவணன் அதுக்கு அப்பா என்னடா சொன்னாரு கோவப்பட்டாரா என கேட்க அதெல்லாம் ஒன்னும் சொல்லல அமைதியா தான் இருந்தாரு. அதுமட்டுமில்லாமல் நேத்து நைட்டு கூட அவன் ஆக்டிங் டிரைவரா வேலைக்கு தான் போயிருந்தான் என சொல்கிறார். அதற்கு கோமதி ஏன்டா அவன் இப்படி எல்லாம் பண்றான் என கேட்க. ஆமா காலேஜுக்கு போறான் அவனுக்கு செலவுக்கு பணம் வேணாமா பைக்க வாங்கி வச்சுக்கிட்டீங்க அவன் என்ன பண்ணுவான் அதனால தான் வேலைக்கு போறான் என சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்போது பாண்டியன் வந்து விடுகிறார்.

மேலும் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் கதிர் வருகிறார். அம்மா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வைம்மா என சொல்ல ஏண்டா நீ வேலைக்கு போன என கேட்கிறார் கோமதி. அதற்கு ஆமாம்ம்மா வேலைக்கு தான போனன், திருடவா போனேன்  ஏம்மா இப்படி பண்றீங்க என சொல்லிவிட்டு கை கால் கழுவ செல்கிறார். ஆனால் ராஜியோ  கதிர் வேலைக்கு போவதை  நினைத்து வருத்தப்படுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.