ஒரு வழியாக சரவணனுக்கு தங்கமயில் கிட்டியது!! ஆனா பொண்ணுக்கு தான் பிடிக்கல.. அடுத்தது என்ன நடக்குமோ..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் கல்யாண வைபோகம்  சுயம்வரம் நிகழ்ச்சியில் பாண்டியன் குடும்பத்தை மேடைக்கு கூப்பிடுகின்றனர். மேடைக்கு போனதும் பாண்டியன் தனது மகனுக்கு எப்படிப்பட்ட பெண் எதிர்பார்க்கிறார் என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பம் மற்றும் பசங்களை பற்றியும் குறிப்பாக சரவணன் பற்றியும் சொல்கிறார்.

மேலும் கோமதியும் தனக்கு வரும் மருமகள் எப்படி இருக்க வேண்டும் என ஒரு சில விஷயங்களை கூறுகிறார். அவர்கள் சொல்வதைப் பார்த்து கீழே இருக்கும் ஒரு பெண் வீட்டார் குடும்பத்திற்கு ரொம்ப பிடித்து விடுகிறது.

ஜெனியை பார்த்ததும் அந்தர் பல்டி அடித்த கோபி.!! அப்பான்னு கூட பார்க்காம கோபியை அசிங்கப்படுத்திய செழியன்..

அடுத்ததாக அவர்களும் மேடைக்கு வந்து அவர்கள் எதிர்பார்க்கும் பையன் எப்படி இருக்க வேண்டும் என சொல்லி அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய பொண்ணு பேரு தங்கமயில் எம் ஏ படிச்சிருக்கா வேலைக்கு எல்லாம் போக மாட்டா என அனைத்தையும் சொல்கிறார்.

அதை கீழே இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் குடும்பத்திற்கு ரொம்ப பிடித்து விடுகிறது. உடனே மேடையிலேயே  நீங்க எதிர் பாக்குற மாதிரி குடும்பம் பாண்டியன் குடும்பம் தான் அந்த பையன் சரவணன் தான் உங்க பொண்ணுக்கு பொருத்தமா இருப்பாங்க அவங்கள வர சொல்றேன் நீங்க பேசிக்கோங்க என அழைக்கின்றனர். இவர்கள் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி சம்மதம் சொல்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக எங்கள் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களிடம் பேசி முடிவு எடுத்து சொல்கிறோம் என பாண்டியன் சொல்கிறார்.

இறந்த பிறகும் கண்திறந்த டேனியல் பாலாஜி.? பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்..

சரவணனுக்கு தங்க மயிலை பிடித்து விடுகிறது. ஆனால் அவங்களோ சரவணன் அழகா இல்ல என நினைக்கிறாங்க. ஆனா தங்கமயில் உடைய அப்பா அம்மா அழகா சோறு போட போது நல்ல பையன் நல்ல குடும்பமா இருக்கிறது தான் நல்லது என ஓகே சொல்லி விடுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.