ஜெனியை பார்த்ததும் அந்தர் பல்டி அடித்த கோபி.!! அப்பான்னு கூட பார்க்காம கோபியை அசிங்கப்படுத்திய செழியன்..

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா மரியத்திடம் சொல்லிவிட்டு ஜெனியையும் குழந்தையையும் அழைத்து வருகிறார். வீட்டிற்கு வந்ததும் செழியனயும் ஜெனியையும் காரிலே இருக்க சொல்லிவிட்டு பாக்யாவும் எழிலும் வீட்டிற்குள் போகின்றனர். உடனே பாட்டி பாக்கியவை பார்த்துவிட்டு செழியன் எங்க  நீங்க இரண்டு பேரும் தான் வரீங்க அவன என்ன பண்ணுணிங்க என கேட்கிறார்.

கொஞ்ச நேரம் பொறுங்க எல்லாத்தையும் சொல்றேன் என சொல்லிவிட்டு பாக்யா கிச்சனுக்கு போய் ஆரத்தி கலந்து எடுத்து வருகிறார். அதற்குள் பாட்டி எழிலிடம் எங்கடா செழியன் என கேட்கிறார் அதற்கு எழில் கொஞ்சம் பொறுங்க பாட்டி எல்லாம் சொல்றோம் என சொல்ல,பாட்டி அதற்குள் வீட்டில் இருக்கும் அனைவரையும் சத்தம் போட்டு கூப்பிடுகிறார். உடனே கீழே வந்த இனியா படிக்க விடுறீங்களா, என்ன ஒரே சத்தமா இருக்கு என கேட்கிறார்.

இறந்த பிறகும் கண்திறந்த டேனியல் பாலாஜி.? பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்..

பாக்கியா ஆரத்தி கலந்து எடுத்து வருவதை பார்த்து என்ன இவ ஆரத்தி எல்லாம் கலந்து வச்சுருக்கா என் தாத்தா கேட்கிறார். அதற்கு எல்லாரும் வெளியே வந்து பாருங்க என எழில் சொல்லிக்கொண்டே  போகிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே போகின்றனர். பாக்யாவை பார்த்ததும் காரில் இருந்து செழியன் வெளியே வருகிறார்.

செழியனை பார்த்ததும் பாட்டி ஒரு வழியா வந்துட்டான் என பெரு மூச்சு விடுகிறார். உடனே தாத்தா செழியனுக்கா ஆரத்தி என கேட்கிறார். அதற்கு பாக்யா செழியினிடம் அவங்களை கூப்பிடு என சொல்கிறார். காரில் இருந்து இறங்கி வரும் ஜெனியையும் குழந்தையும் பார்த்து அனைவரும் என்ன நடக்குதுன்னு தெரியாமல் முழிக்கின்றனர்.

இவங்களுக்கு ஏன் ஆரத்தி எடுக்கற என பாட்டி கேட்கிறார். உடனே இனியா அண்ணி இங்க வந்துட்டாங்களா, இனிமே இங்கதான் இருப்பாங்களா என கேள்வி கேட்கிறார் அதற்க்கு ஆமாம் என எழில் பதில் சொல்கின்றனர். ஆரத்தி எடுத்து விட்டு வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.

மேடையிலேயே ரோகினியை அசிங்கப்படுத்திய விஜயா..! மனோஜ விஜயாகிட்ட இருந்து பிரிக்கணும் பிளான் பண்ணும் ரோகினி.. குடும்பம் பிரியுமா..

கோபி என்ன நடந்தது எப்படி வந்தீங்க என கேட்க அதற்கு செழியன் அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம் ஜெனியோட அம்மா கிட்ட பேசி எங்க ரெண்டு பேரையும் தனியா மீட் பண்ண வச்சாங்க நாங்க பேசி எல்லா பிரச்சினையும் முடிச்சுகிட்டோம் என சொல்கிறார்.

உடனே கோபி ஆமாம் நானும் அப்படித்தான் நினைச்சேன் உங்க ரெண்டு பேரையும் தனியா மீட் பண்ண வச்சு பேச வைக்கணும்னு என அந்தர் பல்ட்டி அடிக்கிறார். உடனே அனைவரும் கோபியை குறைத்து  பார்க்கின்றனர். எது எப்படியோ நீங்க ரெண்டு பேரும் பேசி சேர்ந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஜெனி தாத்தா பாட்டி இடம் பேசுகிறார். பிறகு பாட்டி குழந்தையை வாங்கி கொஞ்சி கொண்டு, ஜெனி பாப்பாவுக்கு தாய்ப்பால் தானே கொடுக்குற நீ மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிடுறியா, சத்தான பழங்கள் எல்லாம் எடுத்துக்கிறியா என கேள்வி கேட்கிறார்.

அப்பா இல்லாமல் எளிமையாக முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.. அப்பாவைப் போல் என்ன செய்தார் பார்த்தீர்களா..

அதற்கு ஜெனி பாட்டி ரொம்ப அக்கறை இருக்க மாதிரி கேட்காதீங்க, நான் இல்லைன்னு நீங்க செழியனுக்கு பொண்ணு பாத்தீங்கல்ல எனக்கேட்க உடனே பாட்டி உங்க அப்பாவும் தான் உனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு அதனாலதான் கோவத்துல நானும் பார்த்தேன் என சொல்கிறார். உடனே எழில்  எல்லாத்துக்கும் காரணம் அவர்தான் என கோபியை காட்டுகிறார். உடனே கோபி முழிக்கிறார். பாக்கியா நான் தான் சொன்னேன்ல இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பேன்னு பாருங்க பண்ணிட்டேன் என சொல்ல  உடனே எழில் பாக்யாவை நீ சிங்கம்மா என கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார்.

அதைப் பார்த்து கோபியும் ஈஸ்வரியும்  பொறாமைப்படுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.