மேடையிலேயே ரோகினியை அசிங்கப்படுத்திய விஜயா..! மனோஜ விஜயாகிட்ட இருந்து பிரிக்கணும் பிளான் பண்ணும் ரோகினி.. குடும்பம் பிரியுமா..

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனா, அண்ணாமலை  இருவரும் முத்துவை காணவில்லை என தேடுகின்றனர், அண்ணாமலையோ முத்துவால் ஏதாவது பிரச்சனை வந்துடுமோ என பயந்து தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்துவோ மண்டபத்திற்கு வெளியே ரோகினி ஏற்பாடு செய்த ஆளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த பால்பாண்டியோ முத்துவை குடிக்க சொல்லி தூண்டுகிறார் ஆனால் முத்து பேசிக்கொண்டே அவரை குடிக்க வைத்து விட்டு இவர் குடிக்காமல் இருக்கிறார்.

அது தெரியாமல் ரோகிணியின் தோழி முத்து குடிக்க ஆரம்பித்துவிட்டான். இனிமே பிரச்சனை வந்துரும் என ரோகினியிடம் போய் சொல்கிறார். ஆனால் முத்து ஓ இன்னைக்கு ஒரு நாள் நான் குடிக்கிறது இல்ல என்னால எந்த பிரச்சனையும் இந்த ஃபங்ஷன்ல வராதுன்னு என் பொண்டாட்டி கிட்ட நான் சொல்லி இருக்கேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே மீனா முத்துவை அங்கிருந்து அழைத்துப் போகிறார். மேலும் இந்த குடிகாரனோட உங்களுக்கு என்ன பேச்சு எனவும் கேட்கிறார். இல்ல அவர் பொண்ணு வீட்டுக்காரர் அப்புறம் அவருக்கு மரியாதை தரவில்லை என்று சொல்லிடுவாங்க அதனாலதான் போனேன் என சொல்கிறார்.

ராகினி இது நீங்க தானா.. சீரியலில் மட்டும் தான் புடவையா.. தம்மாதுண்டு கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் தமிழும் சரஸ்வதியும் நடிகை..

அதனைத் தொடர்ந்து விஜயா ரோகினியிடம் இன்னும் உங்க அப்பா வரல என்ன என ஏமாத்திட்டு இருக்கியா என மேடையிலேயே வைத்து சண்டை போடுகிறார். அப்போது போன் அட்டென்ட் பண்ணல என ரோகிணி சொல்ல, கப்பல்ல வந்திருந்தா கூட இந்நேரம் வந்திருக்கலாம் என விஜயா ரோகினியிடம் சண்டை போடுகிறார் உங்க அப்பா மட்டும் வரல அப்புறம் வச்சிக்கலாம் உன்ன என கோபப்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து ரோகிணி என்ன முத்து குடிச்சிட்டு இருக்கான்  பிரச்சனை ஆரம்பிச்சிடும்ன்னு சொன்ன அவன் என்னடான்னா கூலா உட்கார்ந்து இருக்கான் என கேட்கிறார். அப்போது பால்பாண்டி ஃபுல்லா குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு ஆடிக் கொண்டிருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் பால்பாண்டி நீங்க செய்ய சொன்னது எல்லாத்தையும் நான் செஞ்சுட்டேன் அவன் குடிக்கல இருந்தாலும் பேசின மாதிரி நீங்க எனக்கு காசு கொடுக்கணும் என கேட்கிறார்.

அப்பா இல்லாமல் எளிமையாக முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.. அப்பாவைப் போல் என்ன செய்தார் பார்த்தீர்களா..

அதற்கு அதெல்லாம் கொடுக்க முடியாது என சொல்ல நான் போய் நீங்க தான் என்ன செட் பண்ணி அனுப்பி வச்சீங்க என சொல்லிடுவேன் என சொல்கிறார். அதற்கு நீ போய் சொல்லு குடிச்சிட்டு வந்து ஏன் கைய புடிச்சு இழுக்கறன்னு  சொல்லிடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்து விடுகிறார்.

மேலும் முத்து அண்ணாமலையிடம் அப்பா இந்தப் பார்லர் அம்மா பெரிய பிராடு, நான் சொல்லிட்டு இருக்கேன் நீங்க யாரும் நம்ப மாட்டேங்கறீங்க பாருங்க மலேசியாவில் இருந்து மர்ம்மா அப்பா வருவாருன்னு சொல்லிட்டு இருந்தாங்க இன்னும் வரவே இல்ல எனச் சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரோகினியின் பிரண்டு ரோகினியிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது கூட்டுக்குடும்பம் அப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்காத சீக்கிரமா மனோஜ, உன் வழிக்கு கொண்டு வந்துடு, தனியா போயிடுங்க அப்பதான் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு வரும் என சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.