பணத்தை திருப்பி கொடுக்க சொன்ன பாண்டியன்.! முடியாது என கூறிய கதிர்… என்னால் எதுக்கு சண்டை என உண்மையை சொல்ல வரும் ராஜி…

பரபரப்பாக வெளிவந்த பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ. கடந்த வாரம் பாண்டியன் கதிர் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வீட்டிற்கு வராமல் கடையிலேயே இருந்தார் அதனைத் தொடர்ந்து சரவணன் பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் பாண்டியன் கோமதியிடம் மரியாதையா அந்த  பணத்தையும் நகையையும்  கொடுக்க சொல்லிடு என சொல்கிறார் அதற்கு கதிர்  அதான் செலவு ஆயிடுச்சுன்னு சொல்றேன்ல என சொல்கிறார். அதைக் கேட்டதும் ராஜி உண்மையை சொல்லப் போகிறாள்.

ஆனால் அதை சொல்லவிடாமல் கதிர். அது ஒன்னும் இவர் பணம் இல்லையே  என் விஷயத்துல என் வாழ்க்கையில என்ன பண்ணனும் எனக்கு தெரியும் அதுல யாரும் தலையிட வேண்டாம் என கோபமாக சொல்லிவிட்டு வெளியே போகிறார். அவர் பேசியதை கேட்டு வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

காலில் விழ சொன்ன சிட்டி.. காரை விற்று நண்பர்களின் கடனை அடைத்த முத்து.! மனோஜ் போல் பார்க்கில் உட்கரபோறாரா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

உடனே மகன் பேசியதை கேட்டு  அதிர்ச்சியாகி சோபாவில் உட்காரும் பாண்டியன் இனிமே அவன் எனக்கு பிள்ளையும் இல்ல நான் அவனுக்கு அப்பனும் இல்ல என கோபமாக சொல்கிறார். உடனே அதைத் தொடர்ந்து ரூமில் ராஜி அழுதபடியே உட்கார்ந்து இருக்கிறார்.

ராஜி ஒரு முடிவு எடுக்கிறாள் நான் செய்த தப்புக்கு இன்னொருத்தவங்க  தண்டனை அனுபவிக்க வேண்டாம். உடனே நடந்த உண்மை எல்லாத்தையும் நான் போய் சொல்லிடுறேன் என ரூமை விட்டு வெளியே வருகிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.

இந்த வாரம் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோ ஆதாரத்தை காட்டிய தமிழ்… கூண்டில் ஏறிய கலிவரதன்.. விடுதலை செய்யப்பட்ட சரஸ்வதி பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்…