கோவிலில் ராஜிக்கு தாலி கட்ட போகும் கதிர்.. நிறுத்த நினைக்கும் மீனா, எழில் பாண்டியன் ஸ்டோர் 2 மகா சங்கமம்

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம்  இன்றைய எபிசோடில் மீனா கதிரிடம் உங்க அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்காத கல்யாணங்குறது ஒரு நாள் கூத்து இல்ல வாழ்க்கை ஃபுல்லா நீ வாழ போற பிடிக்காத பொண்ணோட  எப்படி வாழ முடியும். அதனால யோசிச்சு முடிவு பண்ணு என சொல்கிறாள். அதற்கு கதிர் அம்மா எதையும் யோசிக்காமல் சொல்ல மாட்டாங்க அவங்களுக்காக நான் இதை செஞ்சே ஆகணும் என்ன சொல்கிறார்.

அடுத்த சீனில் ராஜி அழுது கொண்டிருக்கிறாள். அப்போது எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல  நான் இங்கவே இருந்துடுறேன் என பாக்கியா மற்றும் அமிதாவிடம் சொல்லி அழுகிறாள். அப்போது கூடவே இருந்த செல்வி அந்தப் பையன் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லி அழுகணும் நீ இல்ல நீ செஞ்ச வேலைக்கு எதுவும் பேசக்கூடாது என திட்டுகிறாள்.

முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் பிரபலமடைந்து பிறகு காணாமல் போன 5 நடிகைகள்.!

அதனைத் தொடர்ந்து பாக்கியா கோமதியிடம் கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்படும் செஞ்சாச்சு என சொல்கிறாள். அப்போது கீழே கதிர் யோசித்து கொண்டு நிற்கிறார் அப்போது எழில் அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார். எழில் கதிரிடம் கல்யாணம் வேணாம்னா சொல்லு உங்க அம்மா கிட்ட சொல்லி நான் இப்பவே நிறுத்தி விடுறேன் என சொல்கிறார்.

எங்க அம்மா இதுவரை என்கிட்ட ஒண்ணுமே கேட்டதில்லை முதன்முதலாக என் கால்ல விழுந்து என் அண்ணன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க என் அண்ணன் குடும்ப மானத்தை  காப்பாத்துன்னு கேட்டு இருக்காங்க அவங்களுக்காக நான் இதை செஞ்சே ஆகணும் என சொல்கிறார்.

பிறகு அடுத்த சீனில் காலையில் கோவிலில் பொண்ணு மாப்பிள்ளை மற்றும் எழில் அமிர்தா செல்வி பாக்கியா கோமதி என அனைவரும் சாமி கும்பிட்டுட்டு இருக்காங்க. அப்போ மூர்த்தி கோமதிக்கு போன் பண்ணி இன்னும் வரலையா நீ பக்கத்துல இருக்கும்போது உன் அருமை தெரியல இப்போ உன்ன பாக்கணும்னு தோணுது சீக்கிரமா வாங்க என சொல்கிறார்.

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. ஒரே படத்தில் இரண்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட மூன்று நடிகர்கள்..

கோமதியோ போன் பேசிவிட்டு பாக்யாவிடம் என் வீட்டுக்காரருக்கு இப்படி ஒரு துரோகத்தை நான் செய்யப் போறேன் இது தெரிஞ்சா அவர் செத்துடுவாரு. ஆனா நான் இங்க  கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு ஒன்னும் தெரியாதது போல அங்க போய் நிக்க போறேன் என சொல்லி அழுகிறாள்.

ஐயர் சாமி கும்பிட்டு மாலை தட்டை கொண்டு வந்து கதிர் மற்றும் ராஜிடம் கொடுக்கிறார். அப்போது கதிர் மற்றும் ராஜி இவர்கள் இருவரும் இதற்கு முன்பு போட்டுக் கொண்ட சண்டையைப் பற்றிய மாறி மாறி யோசித்துப் பார்க்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.